மஞ்சள் நிற பென்குயின் – உலகிலேயே முதல் முறையாக எடுக்கப்பட்ட புகைப்படம்!

Published by
Rebekal

உலகிலேயே முதன்முறையாக அண்டார்டிகா கடல் பகுதியில் மஞ்சள் நிறப் பென்குயின்கள் கண்டறியப்பட்டு அதன் புகைப்படம் வைரலாகி வருகிறது.

வெள்ளை கருப்பு மற்றும் கழுத்துகளில் லேசான மஞ்சள் கலந்த நிறத்துடன் பென்குயின்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் மட்டும் முழுவதுமாக இருக்கக்கூடிய பென்குயின் புகைப்படம் தற்பொழுது பலரையும் கண் கவர செய்துள்ளது. அண்டார்டிகாவின் தெற்கு ஜார்ஜியா தீவு பகுதியில் இரண்டு மாதம் புகைப்பட சுற்றுப்பயணம் சென்ற புகைப்பட ஆர்வலர் குழுவினர் அங்கு லட்சக்கணக்கான பெண் குழந்தைகள் இருப்பதை கண்டு ஆச்சரியம் அடைந்துள்ளனர். அதன்பின் அங்கு இருந்த மஞ்சள் நிற பென்குயின்களை கண்டு ஆச்சரியமடைந்ததுடன், அவற்றை புகைப்படமும் எடுத்துள்ளனர்.

Yellow Penguin

இந்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ள நிலையில் பலரையும் இந்த புகைப்படம் கவர்ந்து வருகிறது. அண்மையில் வெள்ளை நிற பெண் குயின் கண்டறியப்பட்டது. இது மரபணு மாற்றங்களால் ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்பொழுது கண்டறியப்பட்டுள்ள மஞ்சள் நிறப் பென்குயின்கள் தங்கள் துணையை ஈர்க்க அவைகளால் உடலுக்குள் உருவாக்கப்பட்ட மாற்றங்களின் ஒன்றாக இருக்கலாம் என பறவை ஆர்வலர்களால் கூறப்படுகிறது. ஆனால் இது தங்கள் துணையை மட்டுமல்லாமல் தற்போது மனித இனத்தையும் கவர்ந்துள்ளது.

Published by
Rebekal

Recent Posts

அதிரடியில் அலறவிட்ட மும்பை…திணறிய ராஜஸ்தான்! டார்கெட் இது தான்!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…

22 minutes ago

தீவிரவாதிகள் வேட்டையாடப்படுவார்கள் – அமித்ஷா ஆதங்கம்!

டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…

1 hour ago

கட்டிடம் கட்டியாச்சு..அடுத்து திருமணம் தான்..நடிகர் விஷால் மகிழ்ச்சி!

சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…

2 hours ago

“நீ சிங்கம் தான்” விராட் கோலிக்கு STR-ன் ‘அன்பு’ பதிவு!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…

4 hours ago

பிரதமர் மோடி போராளி…பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பார்” நடிகர் ரஜினிகாந்த்!

மும்பை :  கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய…

4 hours ago

பஹல்காம் தாக்குதல் தொடர்பான பொதுநல மனு! உச்சநீதிமன்றம் காட்டம்!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22இல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்…

5 hours ago