தாமதமாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி..! அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 4 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு..!

rain

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கனமழையை எதிர்கொள்ள தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், மழைக்காலங்களில் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு கனமழை பெய்யும் மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், நேற்று அடுத்த 48 மணி நேரத்தில் அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், 21ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு – வடமேற்கு திசையில் நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், தென் கிழக்கு மத்திய கிழக்கு அரபிக் கடலில் இன்று உருவாக இருந்த  காற்றழுத்த தாழ்வு பகுதி தாமதமாவதாகவும், அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த பகுதி உருவாகும் என்று கணிக்கப்படுவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai