2-வது முறை கொரோனா வைரஸ் தாக்கி செவிலியர் உயிரிழப்பு.!

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த செவிலியர் ஒருவர் கொரனோ வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் பல உயிர்கள் பாதிக்கப்படுகிறது, இந்த நிலையில் கொரனோ வைரசால் பல மருத்துவர்கள் மற்றும் போலீஸ்கள் இறந்துள்ளனர். இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கோரணா வார்டில் பணியில் இருந்த செவிலியர் ஒருவர் உயிரிழந்துள்ளார் ,
இவர் சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் இவருக்கு வயது 53, இவர் கடந்த மார்ச் மாதம் முதல் ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனையில் கொரனோ வார்டில் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த மாதம் அவருக்கு கொரனோ தொற்று உறுதி செய்யப்பட்டு பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் , மேலும் சிகிச்சை முடிந்து இரண்டாவது பரிசோதனையில் கொரனோ தொற்று இல்லை எனவே முடிந்த முடிவு வந்ததும் வீடு திரும்பினார் .
அதற்கு பிறகு இவரை வீட்டில் தனிமைபடுத்தி கொண்டு ஓய்வில் இருந்தார் , இந்த நிலையில் மீண்டும் அவருக்கு கோரனோ தொற்று அறிகுறி ஏற்பட்டது மீண்டும் அவருக்கு பரிசோதனை செய்யும் போது இரண்டாவது முறையாக கொரனோ வைரஸ் தாக்கியது தெரிய வந்ததை அடுத்து அவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார், மேலும் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும் இவருக்கு நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பதாகவும் கூறப்படுகிறது .
லேட்டஸ்ட் செய்திகள்
“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!
July 17, 2025
எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!
July 17, 2025