உத்தரவை மீறி கடன் தவணை பெரும் வங்கிகள் – ரிசர்வ் வங்கிக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு!

Default Image

உத்தரவை மீறி கடன் தவணை பெரும் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து ரிசர்வ் வங்கிக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு.

கோபாலகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கடன் தவணை செலுத்த கூடிய கால அவகாசம் ஆகஸ்டு இறுதி வரை ரிசர்வ் வங்கியில் உள்ள போதும் அதை சில வங்கிகள் நடைமுறைப்படுத்தவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

வாங்கி கணக்கிலுள்ள பணத்தை ஒப்புதலின்றி பிடித்துக்கொள்வதாகவும், கடனை திருப்பி செலுத்த கோரி வங்கிகளும் நிதி நிறுவனங்களும் மிரட்டுவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்டு 31-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Rajnath Singh
IAF operation sindoor
IPL 2025
Vikram Misri
ind vs pak war Donald Trump
ind vs pak war