#JUSTNOW: நாளை முதல் வணிக வளாகங்கள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.!

தமிழகத்தில் வணிக வளாகங்கள் நாளை திறக்கப்படவுள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அரசாணை வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தற்போது உள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் செப்டம்பர் 30-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது என நேற்று தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில் நேற்று வெளியிட்ட அறிக்கையின் படி, ஷாப்பிங் மால்கள், அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகளில் 100 பணியாளர்களுடன், மத்திய அரசின் குளிர்சாதன வசதி குறித்த நடைமுறைகளை பின்பற்றியும், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றியும் இயங்க அனுமதிக்கப்படுகிறது. மேலும், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் இயங்க தடை தொடரும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில்,இன்று வெளியிட்ட அரசாணையின் படி, வணிக வளாகங்களில் வாடிக்கையாளர்கள் இடையே 6 அடி தனிமனித இடைவெளி அவசியம் மட்டுமில்லமால் வாடிக்கையாளர்கள் முகக் கவசம் அணிந்து வருவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் உள்ளே வரவும், வெளியே செல்லவும் தனித்தனி வாசல்கள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025