வெறுப்பு அரசியலை மக்கள் ஏற்க மாட்டார்கள்! இந்தியாவில் ட்ரம்பை ஆதரித்த மோடிக்கு இது படிப்பினையாகும் – திருமாவளவன்

Default Image

இந்தியாவில் ட்ரம்பை ஆதரித்த மோடிக்கு ஒரு படிப்பினையாகும். 

கடந்த 3-ம் தேதி அமெரிக்காவில், அதிபர்  தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் அதிபர் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில், ஜோ பைடன் அவர்கள் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றியடைந்தார். தோல்வியை தழுவிய ட்ரம்ப், தோல்வியை ஏற்க மறுத்து, வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடைபெற்றதாக குற்றம்சாட்டி வருகிறார்.

இந்நிலையில், இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு : வெறுப்பு அரசியலை மக்கள் ஏற்கவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. இது இந்தியாவில் ட்ரம்பை ஆதரித்த மோடிக்கு ஒரு படிப்பினையாகும்.’ என பதிவிட்டுள்ளார்.

மேலும், இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திருமாவளவன், அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஜோ பைடனுக்கும், துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் கமலா ஹாரிஸ்க்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai