சஞ்சய் மஞ்சரேக்கரின் கருத்துக்கு மீம்ஸ் போட்டு கலாய்த்த அஸ்வின்!

Default Image
  • அஸ்வின் சிறந்த பந்துவீச்சாளர் என்று அழைக்க முடியாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்.
  • அப்படி சொல்லாதடா சாரி, மனசு வலிக்குது என மீம்ஸ் போட்டு கலாய்த்த அஸ்வின்.

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக ரவிச்சந்திரன் அஸ்வின் கிரிக்கெட் உலகின் சிறப்பு வாய்ந்த பந்துவீச்சாளராக இல்லை எனவும், அதற்கு காரணம் அவர் தென் ஆப்பிரிக்கா இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் ஒரு முறை கூட ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை எனவும் கூறியிருந்தார்.

மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில் விராட், டெண்டுல்கர் போன்ற சில கிரிக்கெட் வீரர்களை ஒப்பிட்டு இவர்கள் தனது பார்வையில் எல்லா நேரத்திலும் பெரியவர்கள் தான் எனவும், ஆனால் அஸ்வினை சிறந்தவராக தான் கருதவில்லை எனவும் தெரிவித்திருந்தார். இவரது இந்த பதிவுக்கு அஸ்வினின் ரசிகர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக தனது ட்விட்டரில் அஸ்வின் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அந்நியன் படத்தில் விக்ரம் விவேக் கதாபாத்திரத்திடம் பேசும் பொழுது “அப்படி சொல்லாதடா சாரி, மனசெல்லாம் வலிக்குது” என்று சொல்லக்கூடிய மீ மை ஷேர் செய்து சிரிப்பது போன்ற ஸ்மைலியையும் பகிர்ந்துள்ளார். இதோ அந்த பதிவு,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai