பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…!

Default Image
  • பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.
  • கொரோனா துயர்துடைக்க நாட்டில் உள்ள 75% மக்களுக்கு உயிர் காக்கும் தடுப்பூசியை இலவசமாக வழங்கியதற்கு நன்றி.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பதாக, நாட்டு மக்களுடன் உரையாற்றும் போது, சில திட்டங்களை அறிவித்தார். அதன்படி, அனைத்து மாநிலங்களுக்கு தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தார். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பிற்கு, தமிழக முதலவர் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் நன்றி தெரிவித்தனர்.

இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘கொரோனா துயர்துடைக்க நாட்டில் உள்ள 75% மக்களுக்கு உயிர் காக்கும் தடுப்பூசியை இலவசமாக வழங்கியதற்கும், நவம்பர் மாதம் வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா உணவு தானியங்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளமைக்கும், கோவின் செயலியில் தமிழ் மொழியை பயன்பாட்டு மொழியாக்கம் செய்தமைக்கும் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Rajnath Singh
IAF operation sindoor
IPL 2025
Vikram Misri
ind vs pak war Donald Trump
ind vs pak war