புதுச்சேரியில் தாமரை மலர்ந்துள்ளது… பாஜகவின் அலை தமிழகத்திலும் வரும் – எல்.முருகன்..!

தமிழ் மண்ணான புதுச்சேரியில் தற்போது தாமரை மலர்ந்துள்ளது. புதுச்சேரியில் வந்துள்ள பாஜகவின் அலை தமிழகத்திலும் வரும் என எல்.முருகன் தெரித்துள்ளார்.
புதுச்சேரியில் பாஜக சார்ந்த ஒருவர் முதல் முறையாக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று புதுச்சேரி சபாநாயகராக பாஜக எம்எல்ஏ செல்வம் பதவியேற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கலந்து கொண்டார்.
பின்னர், செய்தியர்களிடம் பேசிய எல்.முருகன், தமிழ் மண்ணில் பாஜகவைச் சேர்ந்தவர் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தமிழக பாஜக சார்பில் வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். பாஜக தமிழகத்தில் வரவே முடியாது, தாமரை மலராது என்று சொன்னார்கள்.
தற்போது தமிழகத்தில் 4 சட்டப்பேரவை உறுப்பினர்கள் வந்துள்ளனர். தமிழ் மண்ணான புதுச்சேரியில் தற்போது தாமரை மலர்ந்துள்ளது. புதுச்சேரியில் வந்துள்ள பாஜகவின் அலை தமிழகத்திலும் வரும் என தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!
May 15, 2025
இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
May 15, 2025