சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கோரினார் தினேஷ் கார்த்திக்..!!

Default Image

சர்ச்சைக் கருத்துக்கு இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் மன்னிப்பு கோரியுள்ளார். 

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தற்போது வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். அந்த வகையில், இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கடந்த ஜூன் 1 ஆம் தேதி நடைபெற்ற ஒரு நாள் போட்டியில், தினேஷ் கார்த்தி வர்ணனை பணியின் போது ” பேட்ஸ்மேன்களுக்குத் தங்களுடைய பேட்களைப் பிடிக்காது. அவர்களுக்கு அடுத்த பேட்ஸ்மேன்களின் பேட்களைப் பிடிக்கும். பேட் என்பது அடுத்த வீட்டு மனைவி போல” என்று கூறியிருந்தார். அவர் கூறியது பெண்களைப் பற்றிய தரக்குறைவான கருத்து இதனால் தினேஷ் கார்த்திக் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று பலர் பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில், உள்நோக்கத்தோடு அப்படி கூறவில்லை என தனது பேச்சுக்கு அவர் வெளிப்படையாக மன்னிப்பு கோரியுள்ளார். இது குறித்து அவர் கூறியது , ” கடந்த போட்டியின் போது நான் கூறிய கருத்துக்கு தவறு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.  நான் மனதார அப்படிக் கூறவில்லை. அப்படி கூறியது தவறு என புரிந்து கொண்டேன். அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நிச்சயமாக அப்படிக்கூறியது தவறு தான் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Rajnath Singh
IAF operation sindoor
IPL 2025
Vikram Misri
ind vs pak war Donald Trump
ind vs pak war