ஜேஇஇ தேர்வு முடிவுகள் வெளியீடு.! 56 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை.!

JEE exam

JEE Main Result: நாட்டின் முதன்மை பொறியியல் கல்வி நிறுவனங்களின் சேர்க்கைக்கான ஜேஇஇ முதன்மை நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பில் சேர ஜேஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

இந்நிலையில்,10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதிய 2-ம் கட்ட தேர்வில் முழுமையாக 100 மதிப்பெண்களை பெற்று 2 பெண்கள் உட்பட 56 மாணவர்கள் சாதனை படைத்துள்ளார்கள். அதில், தமிழ்நாட்டை சேர்ந்த இருவர், நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் வாங்கி அசத்தியுள்னர்.

100 மதிப்பெண்களை பெற்று 56 முதலிடம் பெற்றவர்களில் பொதுப் பிரிவைச் சேர்ந்த 40 பேர், ஓபிசி பிரிவில் இருந்து 10 பேர் மற்றும் ஜென்-EWS பிரிவில் இருந்து 6 பேரும் அடங்குவர். இது ஐந்தாண்டுகளில் இல்லாத உச்சம் என கூறப்படுகிறது.

அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பட்டியலில், மாநில வாரியாக தெலுங்கானா மாநிலம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முன்னணியில் உள்ளது. இந்த ஆண்டு, அதிகமான வெற்றி பெற்ற மாணவர்கள் உத்தரபிரதேசத்தில் உள்ளனர். அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா மாநிலம் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai