ஐந்தாவது நாளாக சரிந்த இந்திய பங்குச்சந்தை..! சென்செக்ஸ் 62,820 புள்ளிகளாக வர்த்தகம்..!

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 28.34 புள்ளிகள் சரிந்து 62,820 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 18,634 ஆகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
கடந்த 4 நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகிவந்த இந்திய பங்குச்சந்தை, இன்று சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தக நாளில் 62,810 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 28.34 புள்ளிகள் அல்லது 0.045% என சரிந்து 62,820 புள்ளிகளாக வர்த்தகம் ஆகிறது.
மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 7.45 புள்ளிகள் அல்லது 0.040% உயர்ந்து 18,627 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 62,848 புள்ளிகளாகவும், நிஃப்டி 18,634 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.
இண்டஸ்இண்ட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட், லார்சன் & டூப்ரோ, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. டாடா ஸ்டீல், ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, இன்ஃபோசிஸ் லிமிடெட், மஹிந்திரா & மஹிந்திரா உள்ளிட்ட நிறுவங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன