இரண்டாவது நாளில் இந்திய பங்குச்சந்தை 300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வர்த்தகம்..!

Sensex

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 101.77 புள்ளிகள் உயர்ந்து 63,064 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 18,696 ஆகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

வாரத்தின் முதல் நாளான நேற்று ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை, இன்றைய வர்த்தக நாளில் 300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வர்த்தகம் ஆகிறது. இன்று 62,779 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 339.65 புள்ளிகள் அல்லது 0.54% என உயர்ந்து 62,727 புள்ளிகளாக வர்த்தகம் ஆகிறது.

மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 94.65 புள்ளிகள் அல்லது 0.51% உயர்ந்து 18,696 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 62,724 புள்ளிகளாகவும், நிஃப்டி 18,601 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.

ஏசியன் பெயிண்ட்ஸ், ஐடிசி லிமிடெட், ஹிந்துஸ்தான் யூனிலீவர், டைட்டன் கம்பெனி, நெஸ்லே இந்தியா லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. கோடக் மஹிந்திரா வங்கி, எச்சிஎல் டெக்னாலஜிஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, மஹிந்திரா & மஹிந்திரா உள்ளிட்ட நிறுவங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்