பங்குச்சந்தை முடிவு..! சென்செக்ஸ் 60 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம்..!

Default Image
பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 169.87 புள்ளிகள் அதிகரித்து 60,300 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,813 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

கடந்த வாரத்தில் சரிவில் வர்த்தககமாகிவந்த பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியது. இன்றைய வர்த்தக நாளில் 60,087 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் வர்த்தக நாளின் முடிவில் 169.87 புள்ளிகள் அல்லது 0.28% என உயர்ந்து 60,300 புள்ளிகளாக வர்த்தகம் ஆகிறது.

மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 44.35 புள்ளிகள் அல்லது 0.25% என உயர்ந்து 17,813 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 60,130 புள்ளிகளாகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,769 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, இண்டஸ்இண்ட் வங்கி, நெஸ்லே இந்தியா, லார்சன் & டூப்ரோ, எச்சிஎல் டெக்னாலஜிஸ், ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. பஜாஜ் ஃபின்சர்வ், என்டிபிசி லிமிடெட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கோடக் மஹிந்திரா வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்