பங்குச்சந்தை உயர்வு..! சென்செக்ஸ் 303 புள்ளிகள் அதிகரிப்பு..!

இன்றைய வர்த்தக நாளில் 60,550 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 303 புள்ளிகள் அல்லது 0.50% என அதிகரித்து 60,735 ஆகவும், தேசிய

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 303 புள்ளிகள் அதிகரித்து 60,735 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,845 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

இன்றைய வர்த்தக நாளில் 60,550 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 303 புள்ளிகள் அல்லது 0.50% என அதிகரித்து 60,735 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 74.50 புள்ளிகள் அல்லது 0.42% அதிகரித்து 17,845 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 60,431 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,770 ஆகவும் நிறைவடைந்தது.

சென்செக்ஸில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் :

எச்சிஎல் (HCL) டெக்னாலஜிஸ், இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, மஹிந்திரா & மஹிந்திரா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஐடிசி லிமிடெட், விப்ரோ லிமிடெட், நெஸ்லே இந்தியா ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

டைட்டன் நிறுவனம், இண்டஸ்இண்ட் வங்கி, பஜாஜ் ஃபின்சர்வ், ஏசியன் பெயிண்ட்ஸ், டாடா மோட்டார்ஸ், என்டிபிசி லிமிடெட், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.

நிஃப்டியில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் :

யுபிஎல் லிமிடெட், எச்சிஎல் டெக்னாலஜிஸ், இன்ஃபோசிஸ் லிமிடெட், டெக் மஹிந்திரா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், விப்ரோ லிமிடெட், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

அதானி எண்டர்பிரைசஸ், இண்டஸ்இண்ட் வங்கி, எஸ்பிஐ ஆயுள் காப்பீட்டு நிறுவனம், டைட்டன் நிறுவனம், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், அதானி போர்ட்ஸ் & ஸ்பெஷல் எகனாமிக் சோன் (Special Economic Zone), ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.