பங்குச்சந்தை உயர்வு..! சென்செக்ஸ் 62,727 புள்ளிகளாக வர்த்தகம்..!

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 101.77 புள்ளிகள் உயர்ந்து 62,727 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 18,607 ஆகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
கடந்த வாரங்களில் சரிவுடன் வர்த்தகமாகிவந்த இந்திய பங்குச்சந்தை, வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தக நாளில் 62,569 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 101.77 புள்ளிகள் அல்லது 0.16% என உயர்ந்து 62,727 புள்ளிகளாக வர்த்தகம் ஆகிறது.
மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 43.80 புள்ளிகள் அல்லது 0.24% உயர்ந்து 18,607 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 62,625 புள்ளிகளாகவும், நிஃப்டி 18,607 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.
எச்சிஎல் டெக்னாலஜிஸ், இன்ஃபோசிஸ் லிமிடெட், என்டிபிசி லிமிடெட், டாடா ஸ்டீல், டெக் மஹிந்திரா லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. டைட்டன் நிறுவனம், லார்சன் & டூப்ரோ, இண்டஸ்இண்ட் வங்கி, மாருதி சுசுகி இந்தியா, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.
லேட்டஸ்ட் செய்திகள்
உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!
May 15, 2025
இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
May 15, 2025