பங்குச்சந்தை உயர்வு..! சென்செக்ஸ் 63,225 புள்ளிகளாக வர்த்தகம்..!

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 82.41 புள்ளிகள் உயர்ந்து 63,225 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 18,754 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
கடந்த மூன்று நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி வந்த இந்திய பங்குச்சந்தை வாரத்தின் 4வது நாளான இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தக நாளில் 63,140 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 82.41 புள்ளிகள் அல்லது 0.13% என உயர்ந்து 63,225 புள்ளிகளாக வர்த்தகம் ஆகிறது.
மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 27.75 புள்ளிகள் அல்லது 0.15% உயர்ந்து 18,754 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 63,142 புள்ளிகளாகவும், நிஃப்டி 18,726 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.
இதற்கிடையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு சந்தையில் முதலீடு செய்து வரும் வேளையில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் தங்களது அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த மாதங்களை விட மே மாதத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் கிட்டத்தட்ட ரூ.30,000 கோடி முதலீடு செய்துள்ளனர்.
என்டிபிசி லிமிடெட், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, டாடா மோட்டார்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, இண்டஸ்இண்ட் வங்கிஉள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. கோடக் மஹிந்திரா வங்கி, சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், விப்ரோ லிமிடெட், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் உள்ளிட்ட நிறுவங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025