டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஆண்கள் தேர்வுக் குழுவின் தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் இந்திய அணியை அறிவித்தனர். அப்போது, ரோஹித் சர்மா அஜித் அகர்கரிடம் பேசிய விஷயம் ஒன்று தான் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக வைரலாகி வருகிறது. அது எதைப்பற்றி என்றால் பிசிசிஐ இந்திய வீரர்களுக்கு […]
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்த தொடரில் விளையாடவுள்ள இந்திய வீரர்கள் பற்றிய அறிவிப்பை இந்திய அணி வெளியீடாமல் இருந்த நிலையில், இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்ததது. இந்திய அணி : ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், […]
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் , நியூசிலாந்து, குரூப் ஏ பிரிவிலும், பி பிரிவில் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளும் இடம்பிடித்துள்ளது. இதில், இந்தியாவையும், பாகிஸ்தான் அணியையும் தவிர மற்ற அணிகள் தங்களுடைய வீரர்களை அறிவித்து விட்டனர். இன்று தான் கடைசி […]
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் மோசமான விளையாட்டு திறனை அடுத்து வீரர்களுக்கு பிசிசிஐ பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் முக்கிய கட்டுப்பாடு, சர்வதேச போட்டிகள் இல்லாத சமயத்தில் வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் கட்டாயம் பங்கெடுக்க வேண்டும் என்பதாகும். உள்ளூர் போட்டிகளில் மாநில அணிகள் சார்பாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் விளையாட வேண்டும். அதன்படி, ரிஷப் பன்ட் டெல்லி அணிக்காகவும், ரவீந்திர ஜடேஜா […]
டெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராஃபி கோப்பைக்கான இந்திய அணியை கேப்டன் ரோஹித் ஷர்மா, தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் இன்று மதியம் அறிவிக்க உள்ளனர். கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் இன்று மதியம் 12:30 மணி அளவில் செய்தியாளர் சந்திப்பின்போது, இந்திய அணியை அறிவிக்கவுள்ளனர். இந்தியா, பாகிஸ்தான் அணிகளை தவிர, மற்ற அணிகள் தங்களது அணிகளை ஏற்கெனவே அறிவித்து விட்டன. இன்று மதியம் நடைபெறும் […]
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் இளம் வீரரான (27) ரிங்கு சிங் விரைவில் திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் இணையவுள்ளதாக வெளியான செய்திதான் தற்போதைய கிரிக்கெட் உலகில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. அவர் அரசியல்வாதி ஒருவரை திருமணம் செய்துகொள்ள முடிவு எடுத்திருப்பதாகவும், விரைவில் இவர்களுடைய திருமணம் கூட நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் பரவி கொண்டு இருக்கிறது. நிச்சயதார்த்தம் ஆங்கில ஊடகங்கள் வெளியீட்டு வரும் செய்தி தகவலின் படி, இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் […]
மும்பை : ஆஸ்ரேலியாவுக்கு எதிராக நடந்து முடிந்த பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய அணி தோல்வியடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில் கூடுதலாக அதிர்ச்சியளிக்கும் விதமாக, இந்த தொடரில் அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவின் பேட்டிங் பார்மும் மிகவும் மோசமானதாக இருந்தது என்றே சொல்லலாம். டெஸ்ட் போட்டியில் அவருடைய சமீபத்திய பார்ம் சற்று மோசமாக இருந்தாலும் கூட அவருக்கு ஆதரவாகவும் சில வீரர்கள் பேசி வருகிறார்கள். அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் […]
டெல்லி: இந்திய அணி வீரர்களுக்கு 10 புதிய விதிகளை பிசிசிஐ (BCCI) அறிமுகப்படுத்தியுள்ளது. இதை மீறும் வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது. அதன்படி, வீரர்கள் உள்ளூர் கிரிக்கெட்டில் கட்டாயம் விளையாட வேண்டும். வெளிநாடு பயணங்களின் போது குடும்பத்தினர், தனிப்பட்ட உதவியாளர்களை அழைத்து வர கூடாது. பயிற்சி ஆட்டங்களில் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் உள்பட 10 விதிகளை கட்டாயமாக்கியுள்ளது. நடந்து முடிந்த கிரிக்கெட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி தொடர் தோல்விகளால் உலக டெஸ்ட் […]
டெல்லி: ஐ.பி.எல். பாணியில் நடத்தப்படும் மகளிர் பிரீமியர் லீக் 2025-ன் மூன்றாவது 20 ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 14ம் தேதி முதல் தொடங்குவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) WPL அட்டவணையை வெளியிட்டு அறிவித்துள்ளனர். அதன்படி, 2025 ம் ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் போட்டிகள் பரோடா, பெங்களூரு, லக்னோ மற்றும் மும்பை ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. முதல் முறையாக இந்த லீக் நான்கு நகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொடரின் இறுதிப் […]
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. வரும் ஜனவரி 18-ஆம் தேதிக்குள் அறிவித்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களுக்கு பிடித்த வீரர்கள் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட இந்திய அணிக்காக இடம்பெறவேண்டும் என்ற பிளேயிங் லெவனை தேர்வு செய்து வருகிறார்கள். தேர்வு செய்த முன்னாள் வீரர்கள் பலரும் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தான் வேண்டும், […]
டெல்லி : அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளில் 6 அணிகள் தங்கள் அணி வீரரக்ள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுவிட்டது. இந்தியா மற்றும் தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணிகள் இரண்டு அணிகளும் இன்னும் 15 வீரர்கள் அடங்கிய பட்டியலை ஐசிசியிடம் சமர்ப்பிக்கவில்லை. இப்படியான சூழலில், இந்திய அணியில் யார் யார் பங்கேற்பார்கள் என்ற விவரங்கள் சமீபத்திய நாட்களாக பல்வேறு முன்னாள் வீரர்கள் , கிரிக்கெட் […]
ராஜ்கோட்: மகளிருக்கான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தொடரை கைப்பற்றியது. இந்தத் தொடரில் அயர்லாந்தை 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி. இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2ஆவது போட்டியில் 116 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இந்திய […]
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதில் மூத்த நட்சத்திர வீரர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. ஆனால், இதில் அறிமுக ஆட்டக்காரராக களமிறங்கிய நிதிஷ்குமார் ரெட்டி இந்த தொடரில் சொல்லிக்கொள்ளும்படி சிறப்பாக செயல்பட்டார். ஆஸ்திரேலியா மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடி சதம் விளாசினார். அதனால் மெல்போர்ன் கிரிக்கெட் மைதான […]
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 4 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இந்திய அணி தயாராகி வரும் நிலையில், அணியில் விளையாடவுள்ள வீரர்கள் பற்றிய அறிவிப்பை பிசிசிஐ இன்னும் வெளியிடவில்லை. இதன் காரணமாக ஒவ்வொரு வீரர்களுடைய பெயர் விளையாட எதிர்பார்க்கப்படும் வீரர்கள் பற்றிய விவரத்தில் கசிந்து வருகிறது. அப்படி தான் கடந்த சில நாட்களாகவே சஞ்சு சம்சனுக்கு இந்த தொடரில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு வழங்க […]
ராஜ்கோட்: மகளிருக்கான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்தை 116 ரன்கள் வித்தியாசத்தில்இந்திய அணி வீழ்த்தியது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 1-0 என்ற கணக்கில்முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து, இந்தியா […]
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற பிசிசிஐ சிறப்பு நிர்வாகக் குழு கூட்டத்திற்குப் பின், செய்தியாளர் சந்திப்பில் 18-ஆவது ஐபிஎல் போட்டித் தொடர் தொடங்கும் தேதியை உறுதிப்படுத்தினார். மேலும் சிறப்பு நிர்வாகக் குழு கூட்டத்தில் BCCI-யின் புதிய செயலாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் தேவஜித் சைகியா நியமிக்கப்பட்டுள்ளார். ஐசிசி தலைவராக ஜெய்ஷா பதவியேற்ற நிலையில், BCCI சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் […]
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்துக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி ஜனவரி 10-ஆம் தேதி ராஜ்கோட் சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இதில் விளையாடிய கேப்டன் ஸ்மிருதி மந்தனா அசத்தலான சாதனையை படைத்துள்ளார். எத்தனை ரன்கள் அடித்து என்ன சாதனை படைத்தார் என்பது பற்றி பார்ப்போம்.. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ராணி என்று அழைக்கப்படும் […]
கொல்கத்தா: இந்த மாதம் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது. இத்தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்க உள்ளதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறியதாக ஆங்கிலம் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. சமீபத்தில் முடிவடைந்த பார்டர்-கவாஸ்கர் டிராபி 2024-25ல் கே.எல்.ராகுல் முன்னணி மற்ற பேட்ஸ்மேன்களை காட்டிலும் ஓரளவுக்கு நன்றாக பேட்டிங் செய்தார். இருப்பினும், பிப்ரவரி 19 முதல் தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராவதற்காக, இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் தன்னை பரிசீலிக்க […]
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனுக்கு அணியில் விளையாட வாய்ப்புகள் சரியாக வழங்கப்படாதது ஒரு பெரிய கேள்விக்குறியான விஷயமாகவே உள்ளது என்று சொல்லலாம். ஒவ்வொரு முக்கியமான போட்டிகளில் விளையாடவிருக்கும் இந்திய வீரர்கள் பற்றிய விவரம் அறிவிக்கப்படும்போதெல்லாம் அதில் சஞ்சு சாம்சன் பெயர் இருக்குமா? என்று தான் ரசிகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அப்படி தான் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவர் இடம்பெறுவாரா என்கிற கேள்வியும் எழும்பி இருக்கிறது. பிப்ரவரி […]
டெல்லி: கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இந்தியா அணியில் இடம்பெறவில்லை. அதன்பிறகு, உள்ளூர் போட்டிகளில் விளையாடிய போதிலும், இந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் இந்தியாவுக்காக இன்னும் விளையாடவில்லை. ஆனால் சமீபத்திய தகவல்களின்படி, அடுத்து வரவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாட முகமது ஷமி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு 2023 ஆம் ஆண்டு ஒருநாள் […]