304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி! அயர்லாந்தை ‘ஒயிட்வாஷ்’ செய்த இந்தியா!

3வது ஒருநாள் போட்டியில் 304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்தியா அசத்ததியுள்ளது.

IRE vs IAND

ராஜ்கோட்: மகளிருக்கான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தொடரை கைப்பற்றியது. இந்தத் தொடரில் அயர்லாந்தை 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி.

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2ஆவது போட்டியில் 116 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

இதையடுத்து, இந்தியா மற்றும் அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று ராஜ்கோட்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. பிரத்திகா ராவல் 154 ரன்களையும், ஸ்மிருதி மந்தனா 135 ரன்களையும் குவித்து வலுவான அடித்தளம் அமைத்தனர்.

குறிப்பாக, 80 பந்துகளில் 135 விளாசி அதிவேகமாக சதம் அடித்து ஸ்மிருதி மந்தனா சாதனை படைத்தார். இது அவரின் 10வது சர்வதேச சதமாகும். இதன் மூலம், இந்திய பெண்கள் கிரிக்கெட்டில் 10 சதம் அடித்த முதல் வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

ரிச்சா கோஷ் 59 ரன்கள் விளாசினார், மொத்தத்தில் இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 435 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இந்திய அணி அயர்லாந்திற்கு 436 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. இந்த கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 31.4 ஓவர்களில் 131 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூல அயர்லாந்து அணியை 304 ரன்கள் எனும் மிக பெரிய வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை  3-0 என்ற கணக்கில் முழுதாக கைப்பற்றியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies