கண்டங்களின் பெயர்ச்சி பற்றிய கோட்பாடுகளை வகுத்த ஆல்ஃபிரெட் வெஜினர் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1880 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி ஜெர்மனியின் தலைநகராகிய பெர்லினில் பிறந்தவர் தான் ஆல்ஃபிரெட் வெஜினர். கண்டங்களின் பெயர்ச்சி பற்றிய கோட்பாடுகளை வகுத்தவர் இவர். வளிமண்டலம் மற்றும் பூமியின் காலநிலை மாற்றங்களை ஆய்வு செய்வதில் அதிக ஆர்வம் கொண்டிருந்த இவர் முதன்முறையாக 1906 ஆம் ஆண்டு இது குறித்த ஆராய்ச்சிக்காக கிரீன்லாந்துக்கு இரண்டு ஆண்டுகள் பயணம் மேற்கொண்டுள்ளார். இவ்வாறு […]
இந்தியாவின் இரும்பு மனிதர் என்றழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 1875 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி குஜராத்தில் பிறந்தவர் தான் சர்தார் வல்லபாய் படேல். இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படும் இவர் நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருந்த விஷயங்களை எதிர்த்துப் போராடியவர். மேலும் வக்கீல் பணியாற்றிய இவர், உள்ளூர் மக்களின் பிரச்சனைகளை தீர்த்து மிகவும் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். 1917 ஆம் ஆண்டு […]
புகழ்பெற்ற கவிஞரும், பாடலாசிரியரும் சிறந்த ஓவியருமான கவிஞர் வாலி பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1901 ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் என்னும் பகுதியில் பிறந்தவர் தான் பிஎஸ் ரங்கராஜன். ஆனால் இவரை வாலி என்று அழைத்தால் தான் பலருக்கும் தெரியும். புகழ்பெற்ற கவிஞரும், பாடலாசிரியரும், ஓவியருமாகிய இவர் திரைப்படத்தில் எழுதிய முதல் பாடலின் மூலமாக 1958 ஆம் ஆண்டு அறிமுகமானார். அதன் பின்பு 1963 ஆம் ஆண்டு […]
புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளரும், மறுமலர்ச்சி கவிஞருமாகிய சாமுவேல் வேதநாயகம் பிள்ளை பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1826 ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் உள்ள குளத்தூர் பகுதியில் பிறந்தவர் தான் சாமுவேல் வேதநாயகம் பிள்ளை. புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளராக திகழ்ந்த இவர், மாயூரம் மாவட்டத்தில் 13 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். இதனால் இவர் பெரும்பாலும் மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்றே அழைக்கப்பட்டு உள்ளார். இவரது கவிதைகள் அனைத்தும் வாழ்க்கை நெறிகள், பொது […]
இந்தியத் திரைப்படத்துறையில் மாபெரும் சாதனைப் படைத்த ஆச்சி மனோரமா நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 1937 ஆம் ஆண்டு மே 26ம் தேதி மன்னார்குடியில் பிறந்தவர் தான் கோபிசாந்தா. ஆனால், நாம் தற்பொழுது அவரை ஆச்சி மனோரமா என அன்போடு அழைக்கிறோம். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களாகிய மறைந்த முதல்வர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், செல்வி ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநிலத்தின் முதல்வர் என்டிஆர் ஆகியோருடன் நடித்த பெருமைக்குரியவர் மனோரமா. ஆயிரத்துக்கும் மேற்பட்ட […]
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்.பக்தவத்சலம் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1894 ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதி பிறந்தவர் தான் எம்.பக்தவத்சலம். இவர் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர். பல விடுதலைப் போராட்டங்களில் கலந்து கொண்ட இவர் அமராவதி சிறையில் பல இன்னல்களையும் அனுபவித்துள்ளார். 1963ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற இவர், தனது நிர்வாகத் திறனை திறம்பட வெளிப்படுத்தி உள்ளார். இந்து சமய அறநிலையத்துறையின் திருக்கோவில்களின் நிதியிலிருந்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மாணவர் விடுதிகள் […]
சுதந்திரப் போராட்ட வீராங்கனை துர்காவதி தேவி பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1907 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் பிறந்தவர் தான் துர்காவதி தேவி. இந்திய விடுதலைப் புரட்சி இயக்கத்தை சேர்ந்த பகவதி சரண் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர், மிகவும் செயல் துடிப்போடு விடுதலை போராட்ட வீராங்கனையாக திகழ்ந்துள்ளார். தன் கணவருடன் இணைந்து தங்களுக்கு கிடைத்த செல்வத்தை விடுதலைப் போராட்டத்துக்காக செலவழித்த இவர் லாலா […]
இந்திய வானியற்பியலாளர் மேகநாத சாஃகா பிறந்த தினம் வரலாற்றில் இன்று கொண்டாடப்படுகிறது. 1893-ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி வங்காள தேசத்தில் உள்ள டாக்கா எனும் நகரில் பிறந்தவர் தான் இந்திய வானியலாளர் மேகநாத சாஃகா. அயனியாக்க சமன்பாட்டை உருவாக்கியதன் மூலம் இவர் புகழ் பெற்றவராக விளங்குகிறார். இந்த சமன்பாடு விண்மீன்களின் சமநிலை மற்றும் வேதி இயல்புகளைப் பற்றி அறிய ஏதுவாக இருக்கும். இந்திய அறிவியல் ஆராய்ச்சியில் முக்கியமான அடித்தளம் அமைத்த இவர் புகழ் பெற்ற […]
சமரச வேத சன்மார்க்க சங்கத்தை தோற்றுவித்த ஞானி இராமலிங்க அடிகள் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1823 ஆம் ஆண்டு அக்டோபர் ஐந்தாம் தேதி சிதம்பரத்தை அடுத்த மருதூரில் பிறந்தவர் தான் இராமலிங்க அடிகள். வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகள் தனது ஒன்பது வயதிலேயே முருகன் பாடல்களை பாடி பலரது மனதையும் ஆட்கொண்டவர். பசி, பட்டினி, பிணி மற்றும் கல்வி இன்மையால் மக்கள் துன்பத்தை கண்ட இவர் ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என மக்களிடம் […]
சுதந்திர போராட்ட வீரர் கொடி காத்த குமரன் அவர்களின் பிறந்ததினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1904 ஆம் ஆண்டு அக்டோபர் நான்காம் தேதி ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் பிறந்தவர் தான் திருப்பூர் குமரன். இந்திய விடுதலைப் போராட்ட வீரர், கொடிகாத்த குமரன் என அழைக்கப்படும் இவர் இளம் வயதிலேயே நாட்டுபற்று மிக்கவராகத் திகழ்ந்துள்ளார். திருப்பூரில் நடந்த போராட்டங்கள் அனைத்திலும் கலந்துகொண்ட திருப்பூர் குமரன் பல போராட்டங்களை தலைமையேற்று நடத்தியுள்ளார். அதன் பின் 1932 ஆம் ஆண்டு காந்தியடிகளின் […]
விடுதலைப் போராட்ட வீரரும், சிறந்த தமிழறிஞருமான ம.பொ.சிவஞானம் நினைவு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1906 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு எனும் பகுதியில் உள்ள சால்வன்குப்பம் எனும் இடத்தில் பிறந்தவர் தான் மா பொ சிவஞானம். இவர் சிறந்த தமிழறிஞரும், விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். மா பொ சி என அறியப்படும் இவர், சிலப்பதிகாரத்தின் மீது கொண்டிருந்த ஆர்வம் மற்றும் ஆளுமை காரணமாக சிலம்புச் செல்வர் எனவும் […]
தேசத்தந்தை மோகன்தாசு கரம்சந்த் காந்தி பிறந்த தினம் வரலாற்றில் இன்று கொண்டாடப்படுகிறது. 1869 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் என்னுமிடத்தில் பிறந்தவர் தான் காந்தியடிகள். இவரது தாய் மொழி குஜராத்தி. தனது 13-வது வயதிலேயே கஸ்தூரிபாய் எனும் 13 வயது பெண்மணியை மணந்த காந்தியடிகளுக்கு, நான்கு ஆண் குழந்தைகள். தனது 16 வது வயதில் தந்தையை இழந்த காந்தியடிகள், தனது 18-ம் வயதில் பள்ளிப்படிப்பை முடித்து பாரிஸ்டர் எனும் வழக்குரைஞர் […]
பிரெஞ்சு இயற்பியலாளர் ஜீன் பாப்டிஸ்ட் பெர்ரின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1870 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி பிறந்தவர் தான் ஜீன் பாப்டிஸ்ட் பெர்ரின். இவர் பிரெஞ்சு இயற்பியலாளர். பொருளில் உள்ள நீர்மங்களின் நுண்ணிய துகளில் உள்ள பிரௌனியன் இயக்கத்தை பற்றி ஆய்வு செய்த இவர், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் விளக்கத்தையும் மெய்ப்பித்து பொருள்களின் அணு தன்மையை உறுதி செய்துள்ளார். இதற்காக இவர் 1926 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசும் பெற்றுள்ளார். 1914- […]
கவித்தென்றல் அரங்க சீனிவாசன் அவர்களின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1920 ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி பர்மாவின் பெகு மாவட்டம், சுவண்டி என்ற சிற்றூரில் பிறந்தவர் தான் கவி தென்றல் அரங்க சீனிவாசன். இவரது தாயார் மங்கம்மாள் நேதாஜி அவர்களின் இந்திய தேசிய இராணுவத்தின் ஜான்சி ராணி படைப்பிரிவின் வீராங்கனை என கூறப்படுகிறது. மனித தெய்வம் காந்தி காதை என்ற நூல் எழுதுவதற்காக இந்தியா முழுவதும் பயணித்து, தகவல்களைச் சேகரித்த சீனிவாசன், ஐந்து காண்டங்கள், […]
விடுதலைப் போராட்ட வீரர் பகத் சிங் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1907 ஆம் ஆண்டு செப்டம்பர் 28-ஆம் தேதி பாகிஸ்தானில் உள்ள பங்கா என்னும் கிராமத்தில் பிறந்தவர் தான் பகத்சிங். இவர் சிறு வயதிலேயே கோதுமை வயலில் துப்பாக்கி விளைய வைத்து வெள்ளையர்களை வேட்டையாட வேண்டும் என அடிக்கடி கூறுவாராம். அவருக்கு 12 வயது இருக்கும் பொழுது ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது. மேலும், 1928-ம் ஆண்டு சைமன் குழு இந்தியா வருவதை எதிர்த்து பஞ்சாப் […]
தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் நாகேஷ் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1933 ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி தாராபுரத்தில் பிறந்தவர் தான் தமிழ் திரைப்பட உலகின் நகைச்சுவை நாயகன் நாகேஷ். இவரது இயற்பெயர் கிருஷ்ணாராவ் நாகேஷ்வரன். 1959 ஆம் ஆண்டு திரைப்படத்துறையில் புகுந்த இவர், காதலிக்க நேரமில்லை எனும் ஸ்ரீதரின் திரைப்படத்தின் முக்கிய நகைச்சுவை பாத்திரத்தில் நடித்து, அதன் மூலமாகத் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் […]
தமிழகத்தின் மறுமலர்ச்சி கவிஞர் தேசிக விநாயகம் பிள்ளையின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சிவதாணுப்பிள்ளை ஆதிலட்சுமி தம்பதியருக்கு 1876 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி பிறந்தவர் தான் தேசிக விநாயகம் பிள்ளை. இவருக்கு 2 சகோதரிகள் உள்ளனர். ஒன்பதாவது வயதிலேயே தனது தந்தையை இழந்த தேசிக விநாயகம் பிள்ளை, எம்.ஏ படித்து ஆசிரியர் பயிற்சி முடித்து ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். 1901 ஆம் ஆண்டு உமையம்மை எனும் பெண்ணை திருமணம் செய்த இவர், […]
பழம்பெரும் திரைப்பட பாடல் ஆசிரியர் உடுமலை நாராயணகவி பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1899 ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த பூவிளைவாடி எனும் கிராமத்தில் பிறந்தவர் தான் பழம்பெரும் திரைப்படப் பாடலாசிரியர் உடுமலை நாராயணகவி. இவர் பல்வேறு கிராமிய கலைகளை ஆர்வத்துடன் கற்று பயின்றவர். குறிப்பாக புரவியாட்டம், சிக்கு மேலாட்டம், தப்பாட்டம், உடுக்கடிப்பாட்டு ஒயில் கும்மி ஆகியவை இவர் மிகவும் விரும்பி பெற்ற கலைகளாக கூறப்படுகிறது. இவர் விடுதலைப் போராட்டம் […]
தேசியக் கவி ராம்தாரி சிங் தின்கர் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1908 ஆம் ஆண்டு செப்டம்பர் 23-ஆம் தேதி பீகார் மாநிலத்திலுள்ள பேகுசராய் மாவட்டத்தில் உள்ள சிம்ரியா எனும் சிறிய கிராமத்தில் பிறந்தவர் தான் ராம்தாரி சிங் தின்கர். இவர் இந்தி கவிதை இலக்கியத்தின் முக்கிய தூண் என போற்றப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தின் பொழுது இவர் எழுதிய தேசியவாத கவிதைளால் கிளர்ச்சி கவிஞராக திகழ்ந்துள்ளார். சர்தார் வல்லபாய் பட்டேல் 1928 ஆம் ஆண்டு நடந்த […]
மின்சாரத்தின் தந்தை என அழைக்கப்படும் மைக்கேல் ஃபாரடே பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1791 ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தவர் தான் மைக்கேல் ஃபாரடே. இவர் காந்தவியல் மற்றும் மின்சாரவியல் இடையே உள்ள தொடர்புகளை ஆய்வுகளின் மூலம் நிரூபித்தவர். மேலும் மின்காந்தத் தூண்டலைக் கண்டுபிடித்தவரும் இவர் தான். கம்பிச் சுருள் காந்தத்தை நடத்துவதன் மூலமாக மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் எனவும் கண்டறிந்தார். இவர் மின்சாரத்தின் தந்தை எனவும் அழைக்கப்படுகிறார். மேலும் அதிக […]