பாபர், ஹுமாயுன், அக்பர் மற்றும் ஜஹாங்கிர் ஆகியோருக்குப் பின்னர் இந்தியாவில் ஷாஜகான் தான் ஐந்தாவது முகலாய மன்னராக ஆட்சி புரிந்துள்ளார். ஷாஜகானின் இளமை வயதில் அக்பரின் அன்புக்கு உரியவராக இருந்துள்ளார். 1627 ஆம் ஆண்டில் தன்னுடைய தந்தை இறந்ததைத் தொடர்ந்து ஷாஜகான் அரியணை ஏறியுள்ளார். முகலாய பேரரசர்களில் முக்கியமான அரசராக இவர் கருதப்படுகிறார். அவருடைய ஆட்சி முகலாயர்களின் பொற்காலமாக வரலாறு குறிப்பிட்டுள்ளது. ஷாஜகான் ஆட்சி காலத்தில் முகலாய கட்டடக்கலையின் பொற்காலமாக இருந்துள்ளது. ஷாஜகான் நிறைய நினைவுச்சின்னங்களை எழுப்பியுள்ளார். […]
யொகான்னசு வில்லெம் யென்சென் டென்மார்க்கை சேர்ந்த ஒப்பற்ற எழுத்தாளர் ஆவார். இவர் டென்மார்க்கில் உள்ள வடக்கு யூட்லேண்டில் இருக்கக்கூடிய கிராமத்தில் 20 ஜனவரி 1873 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை மாவட்ட கால்நடை அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றியுள்ளார். மேலும் இவர் வீட்டிலேயே தனது தாய் கற்பிக்க 11 வயது வரை பயின்றுள்ளார். பின்னர் கெதாட்டிரல் ஸ்கூல் ஆஃப் விபோர்க்கில் படித்துள்ளார். இவர் 1893-ஆம் ஆண்டு தனது பட்டப் படிப்பை முடித்து, கோபன்ஹாகன் பல்கலைக்கழகத்தில் அறிவியலின் […]
இன்று சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் ஆகும். சுவாமி விவேகானந்தர் ஜனவரி 12, 1863 பிறந்தார். இவர் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவர். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. மேலும் இவர் இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர் ஆவார். இவரின் கருத்துகள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன. இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். அதிலும் 1893 ஆம் ஆண்டு சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய இவரது சொற்பொழிவுகள் […]
இன்று கொடி காத்த குமரன் எனப்படும் திருப்பூர் குமரன் நினைவு நாள். இன்று கொடி காத்த குமரன் எனப்படும் திருப்பூர் குமரன் நினைவு நாள். சுதந்திரப் போராட்டத்தின் போது ஆங்கிலேயர்கள் நடத்திய தடியடியில் திருப்பூர் குமரன் படுகாயம் அடைந்து 1932ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பிறந்த குமரன் நாட்டின் விடுதலைக்காக நடந்த சுதந்திரப் போராட்டங்களில் பங்கேற்றார். 1932ஆம் ஆண்டு நாடு முழுவதும் சட்ட மறுப்புப் போராட்டம் நடைபெற்றது. ஜனவரி 11ஆம் […]
1983 உலக கோப்பையை பெற்றுகொடுத்த தி கிரேட் இந்திய கேப்டன் “கபில்தேவ்” பிறந்த நாள் இன்று. 1983ல் நடந்த கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவிற்கு கோப்பையை பெற்றுகொடுத்த கிரேட் இந்திய கேப்டன் கபில்தேவ் பிறந்தநாள் இன்று. இவர் உலக கிரிக்கெட் வரலாற்றில் உள்ள மிகச்சிறந்த ஆல்ரௌண்டர்களில் இவரும் ஒருவரே. இவர் இந்தியா சார்பில் டெஸ்ட் போட்டிகள் – 5,248 ரன்கள், 434 விக்கெட்டுகள் மற்றும் ஒருநாள் சர்வதேசப் போட்டி – 3,783 ரன்கள், […]
இன்று இந்திய அரசியல்வாதியான அருண் ஜெட்லி பிறந்த தினம். அருண் ஜெட்லி டிசம்பர் 28, 1952 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய பெற்றோர் மகராசு கிசன் ஜெட்லி, இரத்தன் பிரபா ஜெட்லி. இவர் பொருளியல் இளங்கலை பட்டதை படித்து முடித்துள்ளார். இதன் பிறகு புது டில்லியில் சட்டபடிப்பை முடித்துள்ளார். இவர் படிக்கும் போதே கல்விசார்ந்த மற்றும் கல்வி சாராத செயற்பாடுகளுக்காக பாராட்டுக்களை பெற்றவர். இவர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அரசியல்வாதி ஆவார். மேலும், இந்திய உச்ச […]
இன்று மக்கள் திலகம் எம்.ஜி.ராமச்சந்திரன் நினைவு தினம். புரட்சித் தலைவர், மக்கள் திலகம் என்று அழைக்கப்படும் எம்.ஜி.ஆர் மறைந்த தினம் இன்று. 1917ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் நாள் இலங்கையில் உள்ள நாவலப்பிட்டியில் பிறந்தார். மக்கள் அனைவராலும் நேசத்தோடு எம்.ஜி.ஆர் என்று அழைக்கப்பட்ட இவரின் இயற்பெயர் மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன். தன்னுடைய சிறுவயதிலேயே நாடகங்களில் நடிக்கத் தொடங்கியதோடு, தன்னுடைய அயரா உழைப்பு காரணமாக திரைத்துறையில் கால்பதித்தார். 1972ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் நாள் அண்ணா திராவிட முன்னேற்றக் […]
இன்று சுதந்திரப்போராட்ட வீரர் கக்கன் நினைவு தினம். பி.கக்கன் அவர்கள் விடுதலைப் போராட்ட வீரர் மட்டுமல்லாது, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் என பல பொறுப்புகளை வகித்தவர் ஆவார். இவர் ஜூன் மாதம் 18-ஆம் தேதி 1908 ஆம் ஆண்டு, சென்னையில், தும்பைப்பட்டி மேலூரில் பிறந்தார். இவர் பொதுப்பணித்துறை, பழங்குடியினர் நலத்துறை, விவசாயத்துறை அமைச்சர், மாநில உள்துறை அமைச்சர் ஆகிய துறைகளின் அமைச்சராகப் பதவி வகித்துள்ளார். இவர் அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் […]
டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை தினமாக கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்நாள் இயேசு பிறந்த தினமாக கருதப்படுகிறது. கிறிஸ்துமஸ் என்ற வார்த்தை கிறிஸ்ட்+மாஸ் என்ற இரண்டு வார்த்தைகளின் சேர்ப்பாக உள்ளது. இந்நாளில் மேலை நாட்டு மக்கள் கோலாகலமாக கொண்டாடுவர். விரும்பியவர்களுக்கு பரிசுகளை கொடுத்து மகிழ்ச்சியாக கொண்டாடுவர். அன்றைய தினத்தில் நண்பர்கள் வீட்டிற்கு சென்றால் கேக் மற்றும் பலமான விருந்து என அசத்தலான நாளாக […]
இன்று முன்னாள் குடியரசு தலைவர் பிரதிபா பாட்டில் பிறந்த நாள். பிரதிபா தேவிசிங் பாட்டில் 1934 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் நாள் பிறந்தார். இவர் இந்தியாவின் முதல் பெண் குடியரசு தலைவர் ஆவார். இவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜல்கான் மாவட்டத்தை சேர்ந்தவர். இவரது தந்தை பெயர் ஸ்ரீ நாராயண ராவ். மேலும் இவர் அங்கிருக்கும் எம். ஜே. கல்லூரியில் முதுகலைமாணி (எம். ஏ.) பட்டம் பெற்றார். இதனையடுத்து மும்பையில் உள்ள அரசு சட்ட கல்லூரியில் […]
இந்திய நாட்டின் கொடி நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்திய நாட்டில் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் வகையில் இந்நாள் கொடிநாளாக கொண்டாடப்படுகிறது. இந்திய அரசு மற்றும் இந்திய மாநில அரசுகளும் டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி கொடிநாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த கொடி நாள் 1949 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் தியாக உணர்வோடு சேவையில் ஈடுபடும் முப்படை வீரர்களின் குடும்ப நலன்களையும், முன்னாள் படைவீரர்களின் நலன்களையும் காக்கும் பொருட்டு […]
இன்று தமிழகத்தின் மிகப்பெரிய பெண் ஆளுமையான செல்வி ஜெயலலிதா அவர்களின் 5-வது ஆண்டு நினைவு தினம். செல்வி ஜெ. ஜெயலலிதா கர்நாடகாவில் உள்ள மாண்டியா மாவட்டத்தில் பாண்டவபுரா தாலுகாவில், மேல்கோட்டை ஊரில் பிறந்தார். இவரது பெற்றோர் ஜெயராம்-வேதவல்லி. இவர் 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் நாள் பிறந்தார். செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் முன்னாள் தமிழக முதலமைச்சரும், அரசியல் தலைவரும், பிரபல தென்னிந்திய நடிகையும் ஆவார். அரசியலுக்கு வருவதற்கு முன்னர் 120-க்கும் மேற்பட்ட தென்னிந்திய […]
தென்னிந்திய திரையுலகின் புகழ்பெற்ற பின்னணி பாடகி பி.சுசீலா பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1935 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் தேதி ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜய நகரில் பிறந்தவர் தான் பி.சுசிலா. பள்ளியில் படிக்கும் போதே இவருக்கு இசையில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக ஆந்திராவின் புகழ்பெற்ற இசை மேதை ஆகிய துவாரம் வெங்கடசாமி நாயுடு அவர்களிடம் இசை பயின்றுள்ளார். பின் 1955 ஆம் ஆண்டு இவர் பாடிய எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் எனும் […]
இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல்கலாம் ஆசாத் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1888 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி சவுதி அரேபியாவில் பிறந்தவர் தான் மௌலானா அபுல் கலாம் ஆசாத். இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராகிய இவர் 1947 ஆம் ஆண்டு முதல் 1958 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் கல்வி அமைச்சராக இருந்தார். கல்வித் தேவைகளை பூர்த்தி செய்வதில் சிறந்தவராக இருந்த இவர், 1951ஆம் ஆண்டு இந்திய தொழில்நுட்ப கழகத்தை […]
தமிழறிஞர் வீரமாமுனிவர் பிறந்த தினம் வரலாற்றில் இன்று கொண்டாடப்படுகிறது. 1680 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி இத்தாலியில் பிறந்தவர் தான் வீரமாமுனிவர். கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி எனும் தனது இயற்பெயரை தைரியநாதர் என மாற்றிக் கொண்டார். அவர் தமிழ் மீது இருந்த பற்றினாலும் இந்த பெயர் சமஸ்கிருத மொழி என்பதை அறிந்து கொண்டதாலும் தனது பெயரை இறுதியாக வீரமாமுனிவர் என மாற்றிக் கொண்டார். இலக்கணம், இலக்கியம், அகராதி ஆகியவற்றை படைத்த இவர் இலத்தீன் மொழியில் […]
அறிவியல் மேதை மேரி கியூரி பிறந்த தினம் வரலாற்றில் இன்று கொண்டாடப்படுகிறது. 1867 ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி போலந்தில் உள்ள வார்சா எனும் நகரில் பிறந்தவர் தான் மேரி கியூரி. ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு தனிமங்களை கண்டுபிடித்த இவர் மிகச் சிறந்த பெண் அறிவியல் மேதையாக விளங்குகிறார். உடலில் ஏற்படக்கூடிய கட்டிகளுக்கு சிகிச்சை அளிக்க ரேடியத்தை பயன்படுத்திய நிலையில், அதனை கியூரி தெரபி என அழைத்தனர். கதிரியக்கம் பற்றிய ஒரு கோட்பாடு, கதிரியக்க […]
சுதந்திரப் போராட்டத் தலைவர் சித்தரஞ்சன் தாஸ் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1870 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் தேதி வங்கதேச தலைநகர் டாக்கா அருகே உள்ள விக்ரம்பூரில் பிறந்தவர் தான் சித்தரஞ்சன் தாஸ். தேசபந்து என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட இவர், அரசியலில் அதிக தீவிரம் காட்டியவர். மேலும் இந்திய தேசிய காங்கிரசின் முக்கிய தலைவராக இருந்த இவரை சுபாஷ் சந்திரபோஸ் தனது அரசியல் குரு என போற்றியுள்ளார். ஒத்துழையாமை இயக்கத்தை காங்கிரஸ் கைவிட்டதால் […]
தாவரவியல் நிபுணரும், மரபினக் கலப்பு ஆராய்ச்சியாளரான ஜானகி அம்மாள் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1897 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி கேரள மாநிலத்திலுள்ள தலச்சேரி எனும் பகுதியில் பிறந்தவர் தான் ஜானகி அம்மாள். இவர் உலகப் புகழ்பெற்ற தாவரவியலாளர் ஆன சிரில் டார்லிங் உடன் இணைந்து தவிர குரோமோசோம் அட்லஸ் எனும் வரைபடத்தொகுப்பை 1945 இல் வெளியிட்டார். அதன் பின்பாக லண்டனில் உள்ள ஜான் இன்னஸ் தோட்டக்கலை நிறுவனத்தில் இணை மரபியலாளராக பணிபுரிந்துள்ளார். […]
நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்திய சென் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1933 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாந்திநிகேதனில் பிறந்தவர் தான் அமர்த்திய சென். பொருளாதாரக் கோட்பாடு, அரசியல் தத்துவம், பொது சுகாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்ட இவர் பொருளாதார நிபுணராக திகழ்ந்துள்ளார். உணவு உற்பத்தி மட்டும் போதாது அதை வாங்க கூடிய மக்களுக்கும் சக்தி வேண்டும். பஞ்சம் மற்றும் வறட்சி […]
சிறந்த மருத்துவரும், சமூக ஆர்வலருமான மகேந்திரலால் சர்க்கார் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1883 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி மேற்கு வங்கத்தில் பிறந்தவர் தான் மகேந்திரலால் சர்க்கார். இவர் சிறந்த ஹோமியோபதி மருத்துவரான வில்லியம் எழுதிய புத்தகத்திற்கு விமர்சனம் எழுதினார். ஹோமியோபதிக்கு எதிரான தன் கருத்துக்களை பதிவு செய்வதற்காக அந்த நூலைப் படித்துள்ளார். ஆனால் படித்து முடித்த பின்பு ஹோமியோபதி தான் சிறந்தது என அறிந்த அவர் இறுதியில் ஹோமியோபதியில் பயிற்சி பெற்றுள்ளார். […]