மதுரை

மதுரையிலுள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை …!

முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரையிலுள்ள தேவர் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள வெண்கல தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் மூர்த்தி, பெரியசாமி மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். பின்னர், சாலை மார்க்கமாக பசும்பொன் சென்று அங்குள்ள தேவர் நினைவிடத்திலும் முதல்வர் […]

- 2 Min Read
Default Image

பெண் காவல் ஆய்வாளர் ஜாமீன் : யார் தவறு செய்தாலும் தண்டனை கிடைக்கும் – ஐகோர்ட் கிளை!

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை கிடைக்கும் என 10 லட்சம் பணம் பறித்த பெண் காவல் ஆய்வாளரின் ஜாமீன் மனு விசாரணையில் ஐகோர்ட் கிளை கருத்து.  சிவகங்கை மாவட்டம் இடையன்குடியை சேர்ந்த பேக் டெய்லரிடம் 10 லட்சம் ரூபாய் பறித்த வழக்கில், மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் வசந்தி என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து கைது செய்யப்பட்டுள்ள பெண் காவல் ஆய்வாளர் வசந்தி தனக்கு ஜாமின் கோரி மனு ஒன்றை அளித்துள்ளார். […]

#Arrest 3 Min Read
Default Image

சட்ட விரோதமாக குழந்தையை விற்ற காப்பக உரிமையாளருக்கு நிபந்தனை ஜாமீன்….!

சட்ட விரோதமாக குழந்தையை விற்ற மதுரை இதயம் காப்பக உரிமையாளருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் இயங்கி வரக்கூடிய இதயம் எனும் தனியார் ஆதரவற்றோர் காப்பகத்தில் ஐஸ்வர்யா என்பவருடைய ஒரு வயது ஆண் குழந்தை வளர்க்கப்பட்டு வந்த நிலையில், இந்த குழந்தை கொரோனாவால் உயிரிழந்ததாக குழந்தையின் உறவினர்களிடம் காப்பக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக குழந்தையின் குடும்பத்தினர் காவல் துறையில் புகார் அளித்த நிலையில், வருவாய் துறையினர் அந்த காப்பகத்தில் விசாரணை நடத்தியுள்ளனர். […]

#Arrest 4 Min Read
Default Image

3 ஆண்டுகளில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் – மதுரை ஐகோர்ட்!

3 ஆண்டுகளில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் என மதுரை ஐகோர்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என கடந்த 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி அறிவித்திருந்த நிலையில், 2018ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்பு வெளியாகியது. அதன்படி மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தோடு அறிவிக்கப்பட்ட பிற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான […]

AIIMS hospital 4 Min Read
Default Image

PM தோனி, CM விஜய் , ஆளப்போகும் மன்னர்கள்: விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்..!

PM தோனி, CM விஜய், ஆளப்போகும் மன்னர்கள் என மதுரை விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இயக்குநர் செல்வராகவன், அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.  பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இன்று நடிகர் விஜய் ‘பீஸ்ட்’ பட ஷூட்டிங்கும், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் […]

#Madurai 3 Min Read
Default Image

#Breaking:மதுரை ஆதீனம் கவலைக்கிடம் – தகவல்…!

மதுரை ஆதீனம் அருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமி அவர்கள் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள மிக பழமையான சைவ சமய திருமணங்களில் ஒன்றான மதுரை ஆதீனத்திற்கு தலைமை வகிப்பவர் ஆதீனம் என்று அழைக்கப்படுகிறார்.இதில்அருணகிரி ஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமி என்பவர் 292வது ஆதீனம் ஆகவுள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மதுரை ஆதீனம் அருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமி அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் […]

Arunagirinatha Sri Gnanasambanda Paramacharya Swami 3 Min Read
Default Image

கொரோனா தொற்று குறைந்ததும் தமிழகத்தில் கோவில்கள் அனைத்தும் திறக்கப்படும் – அமைச்சர் சேகர் பாபு!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆய்வு பணிக்காக சென்றிருந்த அமைச்சர் சேகர்பாபு, தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்ததும் கோவில்கள் அனைத்தும் திறக்கப்படும் என கூறியுள்ளார். சென்னையில் இருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஆய்வுப் பணிகளுக்காக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அவர்கள் வருகை தந்துள்ளார். அங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, ஆய்வு பணிக்காக மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்ததாகவும், தமிழகத்தில் கொரோனா தொற்று முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் […]

coronavirus 3 Min Read
Default Image

அண்ணனை அடக்கம் செய்ய சென்ற தம்பி மயங்கி விழுந்து உயிரிழப்பு!

உயிரிழந்த அண்ணனை அடக்கம் செய்ய சென்ற தம்பி உயிரிழப்பு. இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளும் காவல்துறையினர். தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள தொட்டியார் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தான் 72 வயது முதியவர் கருணாநிதி. இவரது அண்ணன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், தனது அண்ணனின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக சென்ற கருணாநிதி இறுதி சடங்கு முடிந்ததும் மயானத்திலிருந்து உறவினரின் மோட்டார் பைக்கில் வீட்டிற்கு வந்துள்ளார்.அதன் பின்பு சிறிது […]

#Brother 3 Min Read
Default Image

அதிகரிக்கும் கருப்பு பூஞ்சை தொற்று நோய் – மதுரையில் 20 பேர் பாதிப்பு!

கொரோனா நோயாளிகளை தாக்கக்கூடிய கருப்பு பூஞ்சை தொற்று நோயால் மதுரையில் இதுவரை 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனராம். நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை மிக தீவிரமாக பரவி வரும் நிலையில் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் பாதிப்புகளும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. கொரோனாவில் இருந்து மிகவும் கடினப்பட்டு மீண்டு வருபவர்களுக்கு தற்பொழுது மிகப்பெரும் சவாலாக கருப்பு பூஞ்சை நோய் தற்போது பரவி வருகிறது. இதன் மூலம் கண், காது, மூக்கு, தாடை பகுதியில் வீக்கம் ஏற்பட்டு பல் வலி […]

black fungal infection 3 Min Read
Default Image

ஆக்சிஜன் லாரிக்காக நள்ளிரவு 1 மணி வரை காத்திருந்து பணியாற்றிய மதுரை எம்.பி. வெங்கடேசன் மற்றும் அமைச்சர் பி.மூர்த்தி..!பாராட்டிய மக்கள்..!

மதுரை அரசு ராஜாஜி கொரோனா சிறப்பு மருத்துவமனையில் ஆக்சிஜன் லாரிக்காக நள்ளிரவு 1 மணி வரை காத்திருந்து எம்.பி. வெங்கடேசன் மற்றும் அமைச்சர் பி.மூர்த்தி பணியாற்றியுள்ள சம்பவம் பொது மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 24 மணி நேரமும் தென்மாவட்ட  மக்கள் அனைவரும் சிகிச்சை பெறும் வகையில் சிறப்பு மருத்துவ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.அதன்படி,மருத்துவமனையின் கொரோனா சிறப்பு வார்டில் 1,200 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில்,நேற்று மாலை 3 மணிக்கு வரவேண்டிய ஆக்சிஜன் […]

#Madurai 4 Min Read
Default Image

உசிலம்பட்டி அருகே கடன் பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை!

மதுரை உசிலம்பட்டி அருகே கடன் பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை உசிலம்பட்டி அருகே நாகப்பட்டறை ஒன்று வைத்து நடத்தி வருபவர் தான் சரவணன். இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மனைவியுடனும் தனது மூன்று பிள்ளைகளுடனும் நாகப்பட்டறையில் வரும் வருமானத்தில் வாழ்ந்து வந்துள்ளார் சரவணன். இந்நிலையில் சில மாதங்களாக சரவணனுக்கு கடன் பிரச்சினை அதிகம் ஏற்பட்டுள்ளது. கடன் […]

poison 4 Min Read
Default Image

கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் இன்றி நடைபெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்!

கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், வருடந்தோறும் கோலாகலமாக நடைபெறக்கூடிய மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று பக்தர்கள் இன்றி நடைபெற்றுள்ளது. நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் புதிதாக பாதிக்கப்படுவதுடன், நாளுக்கு நாள் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்து கொண்டே இருக்கின்றனர். கொரோனா தொற்றை தடுப்பதற்காக ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், […]

coronavirus 4 Min Read
Default Image

திருப்பி செலுத்தப்படாத கடனுக்கு பதிலாக வீட்டை பூட்டி சீல் வைத்த தனியார் வங்கி – இரு மகள்களுடன் தெருவில் விவசாயி!

கொரோனா தொற்று மற்றும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாயி தனியார் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை எனும் காரணத்திற்காக அவரது வீட்டை பூட்டி சீல் வைத்துள்ளது தனியார் வங்கி நிறுவனம். விவசாயிகளின் போராட்டமும் விவசாயிகளின் அன்றாட வாழ்க்கை முறையும் தான் இந்தியாவில் தற்போது அதிக அளவில் பேசப்படும் பொருளாக இருந்து வருகிறது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களின் காரணமாக டெல்லியில் விவசாயிகள் பெரும் போராட்டத்தை கடந்த மூன்று மாதங்களாக […]

farmer 5 Min Read
Default Image

மதுரை மெட்ரோ ரயில் சேவை தொடர்பான வழக்கு – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

மதுரை மெட்ரோ ரயில் சேவை திட்டத்தை அமல்படுத்த கோரி தொடரப்பட்ட  வழக்கில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் மெட்ரோ ரயில் சேவை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி நடந்து வரும் நிலையில், 20 லட்சம் மக்கள் இதனை பயன்படுத்தி வருகின்றனர். அங்கு மட்டுமல்லாமல், கொல்கத்தா மெட்ரோ ரயில் சேவையும் தற்பொழுது வரையும் செயல்பட்டு வரும் நிலையில், மதுரை நகரை கடந்து திருமங்கலம், மேலூர், பெருங்குடி, […]

case 4 Min Read
Default Image

திமுக எம்.பி கனிமொழி இன்று மதுரையில் சுற்றுப்பயணம்!

திமுக மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி எம்.பியுமாகிய கனிமொழி இன்று மதுரையில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். திமுக மகளிரணி செயலாளரும் தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி இன்று மதுரை தெற்கு மாவட்ட பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். மதுரை ஆர்.டி.ராகவையார் மகாலில் அனைத்து சமுதாய சங்கங்களின் நிர்வாகிகளை காலை 9 மணிக்கு பின் சந்திக்க உள்ள கனிமொழி, 10 மணிக்கு ஜீவாநகர் செல்ல உள்ளதாகவும் அதன் பின் அப்பள தொழிற்சாலைகளில் பணி புரிய கூடிய பெண் தொழிலாளர்களுடன் உரையாட உள்ளதாகவும் கூறப்படுகிறது. […]

#Kanimozhi 4 Min Read
Default Image

மதுரையில் கட்டிடம் இடிக்கும் பணியின் போது கட்டிடம் விழுந்ததில் இருவர் உயிரிழப்பு!

மதுரையில் பழைய கட்டிடத்தை இடிக்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்த பொழுது, அங்கு பணியாற்றிய வேலையாட்கள் மீது கட்டிடம் இடிந்து விழுந்ததில் இருவர் பலியாகியுள்ளனர். மதுரையில்  கட்டிடம் ஒன்றை இடித்து விட்டு அவ்விடத்தில் மற்றொரு கட்டிடம் கட்டுவதற்காக பணியாட்கள் நியமிக்கப்பட்டு கட்டிடத்தை இடிக்கும் பணி நடைபெற்றுள்ளது. இந்த பணியின் போது வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் மீது கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. மூவர் மீது கட்டிடம் இடிந்து விழுந்த நிலையில், இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மற்றொருவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். […]

#Death 2 Min Read
Default Image

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – முதல்வர், துணை முதல்வர் தொடங்கி வைக்கின்றனர் – அமைச்சர் ஆர் பி உதயகுமார்!

வருகின்ற ஜனவரி 16-ல் அலங்காநல்லூரில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டை முதல்வர் மற்றும் துணை முதல்வர் தொடங்கி வைக்கின்றனர் என அமைச்சர் ஆர் பி உதயகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். வருகிற ஜனவரி 16ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த சில கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் என சான்று பெற்று இருப்பவர்கள் மட்டுமே காளையுடன் நிகழ்ச்சிக்கு வர வேண்டும் எனவும், அதிகபட்சமாக 300 பேர் வரையிலும் கலந்து கொள்ளலாம் எனவும், 7 நாட்களுக்கு […]

Alankanallur 3 Min Read
Default Image

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – 300 மாடு பிடி வீரர்கள் பங்கேற்க அனுமதி!

வருகிற மாட்டுப்பொங்கல் தினத்தன்று அலங்காநல்லூரில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டில் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக சில கட்டுப்பாடுகளுடன் அடுத்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தற்பொழுது அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 8 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரையிலும் நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்று பெற்றவர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் […]

alanganalloor 3 Min Read
Default Image

முல்லை பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு நேரடி குடிநீர் திட்டம் – அடிக்கல் நாட்டினார் முதல்வர்!

முல்லை பெரியாறு அணையில் இருந்து நேரடியாக மதுரைக்கு குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு முதல்வர் இன்று அடிக்கல் நாட்டியுள்ளார். மதுரையில் இன்று 69.11 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை திறந்து வைத்துள்ள தமிழக முதல்வர், 3.95 கோடி மதிப்பிலான இரண்டாயிரத்துக்கும் அதிகமான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கியுள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த அரசு விழாவில் பங்கேற்று கட்டிடங்களை திறந்து வைத்த பின்பு, முல்லைப் பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு நேரடியாக குடிநீர் வழங்கும் திட்டத்துக்கும் […]

CM Edappadi Palanisamy 3 Min Read
Default Image

மதுரை ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்து.!

மதுரையில் ஒரே மாதத்தில் 3வது முறையாக ஜவுளிக்கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட,5 மணி போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். மதுரை தெற்கு மாசி வீதியில் சைபர் அகமது என்பவருக்கு சொந்தமான ஜவுளி கடை ஒன்று உள்ளது .அங்கு இன்று அதிகாலை 4 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.உடனடியாக பெரியார் பேருந்து நிலையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் வரும் முன்னரே ஜவுளிக்கடை மற்றும் குடோனில் தீ மளமளவென பரவி பல லட்சம் […]

#Fireaccident 4 Min Read
Default Image