தமிழ்நாடு

#ELECTION2022: அதிமுக-பாஜக இடையே இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பேசப்பட்டது என்ன?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தையை தொடர்வோம் என அதிமுக மற்றும் பாஜக அறிவிப்பு. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருடன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கூட்டணி, இடப்பங்கீடு குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோர் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை ஈடுபட்டனர். இந்த […]

#AIADMK 7 Min Read
Default Image

2.1 கோடி மரங்களை நட்டு சாதனை படைத்த காவேரி கூக்குரல் இயக்கம்!

1,25,000 விவசாயிகள் மரம் சார்ந்த விவசாயத்திற்கு மாறியுள்ளனர் என்று காவேரி கூக்குரல் இயக்கத்தின் மாநில கள ஒருங்கிணைப்பாளர் தகவல். கொரோனா பெருந்தொற்று காலத்திலும் காவேரி கூக்குரல் இயக்கம் 2.1 கோடி மரங்களை விவசாயிகள் மூலம் நடவு செய்து சாதனை படைத்துள்ளது. அத்துடன் சுமார் 1,25,000 விவசாயிகளை மரம் சார்ந்த விவசாய முறைக்கு மாற்றி உள்ளது. இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் இன்று (ஜனவரி 29) நடைபெற்றது. இதில் காவேரி கூக்குரல் இயக்கத்தின் மாநில […]

#Farmers 10 Min Read
Default Image

தேசத்துரோகக் குற்றமிழைத்த மோடி பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் – திருமாவளவன் எம்.பி

பெகாசஸ் உளவு விவகாரத்தில் தேசத்துரோகக் குற்றமிழைத்த மோடி பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என தொல்.திருமாவளவன் எம்.பி அறிக்கை. இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேல் நாட்டிடமிருந்து பெகாசஸ் உளவுச் செயலியை மோடி அரசு வாங்கியது உண்மை என்பதை ‘நியு யார்க் டைம்ஸ்’ நாளேடு ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்தியுள்ளது. உளவுச் செயலியை வாங்கவில்லை என்று நாடாளுமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் பொய்யுரைத்த மோடி அரசு தேசத்துரோகக் குற்றம் இழைத்துள்ளது. இதற்குப் பொறுப்பேற்று பிரதமர் பதவியிலிருந்து […]

#NarendraModi 9 Min Read
Default Image

ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு – தமிழக அரசு புதிய உத்தரவு!

ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்வதில் பிரச்சனை எழுந்தாலும், பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவு. தமிழகத்தில் நியாயவிலை கடைகளில் கைரேகை பதிவு இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால், QR-ஐ ஸ்கேன் செய்தும், குடும்ப அட்டை எண்ணை விற்பனை முனையத்தில் பதிவு செய்தும், ரேஷன் பொருட்களை பொதுமக்களுக்கு தடையின்றி வழங்க வேண்டும் என்று உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். கைரேகை பதிவு செய்யும் இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் தொடரும் நிலையில், உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையர் […]

- 4 Min Read
Default Image

#BREAKING: தமிழகத்தில் குறையும் கொரோனா.. ஒரேநாளில் 24,418 பேருக்கு பாதிப்பு!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 24,418 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33,03,702 ஆக உயர்வு. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 24,418 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று 26,533 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், இன்று 24,418 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் முன்பு இருந்ததை விட தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. […]

#TNGovt 3 Min Read
Default Image

ஜன.31க்குள் வேட்பாளர் பட்டியலை தாக்கல் செய்ய மாவட்ட செயலர்களுக்கு உத்தரவு!

ஜனவரி 31-க்குள் வேட்பாளர் பட்டியலை தாக்கல் செய்ய மாவட்ட செயலர்களுக்கு திமுக தலைமை உத்தரவு. ஜனவரி 31-க்குள் கூட்டணி கட்சிகளுடன் இடப்பங்கீட்டை முடிவு செய்ய மாவட்டச் செயலாளர்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். கூட்டணிக்கு ஒதுக்கிய இடங்கள் தவிர திமுக போட்டியிடும் இடங்களை முறைபடுத்தி, அவற்றில் போட்டியிடும் கழக வேட்பாளர் பெயர் பட்டியலை 2 நாட்களுக்குள் மாவட்டக் கழகச் செயலாளர்/பொறுப்பாளர்கள் தலைமைக் கழகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் அறிவுரைத்துள்ளார்.  கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகளுடன் சுமூகமாக […]

#DMK 2 Min Read
Default Image

Offer அவர்களின் கடமை, Acceptance எங்களின் கடமை – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

தொடர் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தகவல். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருடன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கூட்டணி, இடப்பங்கீடு குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோர் சுமார் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர். […]

#AIADMK 5 Min Read
Default Image

#BREAKING: இதைச் செய்ய தவறினால் தகுதி நீக்கம் – மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!

ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி விலகாமல் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட மனுத்தாக்கல் செய்தால், தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை. ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் உரியவாறு பதவியில் இருந்து விலகாமல் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்தால் ஏற்கனவே வகிக்கும் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய சட்டத்தில் இடம் உள்ளது என்றும் உரிய பதவியில் இருந்து விலகாமல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டால் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் மாநில தேர்தல் […]

#Election Commission 4 Min Read
Default Image

#BREAKING: 17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் – தமிழக அரசு உத்தரவு!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு. தமிழகத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, 17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, என்.குமார், காவல் துணை ஆணையர் சென்னை, தாம்பரம் காவல் ஆணையரகத்தின் போக்குவரத்துப் பிரிவு காவல் துணை ஆணையர் பதவியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். எம்.ஆர்.சிபி […]

#TNPolice 6 Min Read
Default Image

#BREAKING: அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா..!

அதிமுக முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதியானது. கொரோனா உறுதியான நிலையில்  சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக தங்கமணி அனுமதிக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.

#Thangamani 1 Min Read
Default Image

#ElectionBreaking: அதிமுக – பாஜக இடையே பேச்சுவார்த்தை தொடரும் – அண்ணாமலை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு தொடர்பாக அதிமுக – பாஜக இடையே மூன்றரை மணிநேரத்திற்கு மேலாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை நிறைவு. தமிழகத்தில் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பாஜக நிர்வாகிகளுடன், மாநில தலைவர் அண்ணாமலை இரு தினங்களாக சென்னை கமலாலயத்தில் ஆலோசனை மேற்கொண்டார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு குறித்து அதிமுக மற்றும் பாஜக இடையே பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில், பாஜகவுக்கு அதிக […]

#AIADMK 5 Min Read
Default Image

8ம் வகுப்பு தனித்தேர்வு எழுதியவர்களுக்கு பிப்.1ம் தேதி ரிசல்ட் – தேர்வுத்துறை!

8ம் வகுப்பு தனித்தேர்வு எழுதியவர்களுக்கு பிப்ரவரி 1ம் தேதி ரிசல் வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவிப்பு. தமிழகத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை நடைபெற்ற தனி தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் வரும் 1-ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அதன்படி, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் பிப்ரவரி 1-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் முடிவுகளை அறிந்துகொள்ளலாம் […]

#Students 2 Min Read
Default Image

பேச்சுவார்த்தை இழுபறி..! அதிக இடங்களை கேட்கும் பாஜக..? மறுக்கும் அதிமுக ..?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சீட் பங்கீடு தொடர்பாக அதிமுக மற்றும் பாஜக இடையேயான பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பாஜக நிர்வாகிகளுடன் மாநில தலைவர் அண்ணாமலை, நேற்று, இன்று சென்னை கமலாலயத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு குறித்து அதிமுக மற்றும் […]

#AIADMK 3 Min Read
Default Image

TNPSC – குரூப்-2, குரூப்-2A, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியீடு!

TNPSC குரூப்-2, குரூப்-2A, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியீடு. TNPSC குரூப்-2, குரூப்-2A, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. குரூப்-2, குரூப்-2A தேர்வுக்குக்கான அறிவிப்பு பிப்ரவரியிலும், குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச்சியிலும் வெளியிடப்படும் என்றும் TNPSC தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பதவிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 மற்றும் குரூப் […]

#TNPSC 4 Min Read
Default Image

#BREAKING: அதிமுகவில் 6 பேர் பதவியிலிருந்து விடுவிப்பு -ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவிப்பு.!

திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்ட 6 பேரை பதவியிலிருந்து விடுவித்து ஓபிஎஸ், இபிஎஸ் அறிக்கை வெளிட்டுள்ளனர். திமுக-விற்கு ஆதரவாக செயல்பட்ட காரணத்தினால் அதிமுகவில் 6 பேர் பதவியிலிருந்து விடுவித்து ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து இருவரும் சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திண்டுக்கல் மேற்கு […]

#AIADMK 5 Min Read
Default Image

#BREAKING: இ-சேவை மையங்களில் மதிப்பெண் சான்றிதழ் பெறலாம் – பள்ளிக்கல்வித்துறை!

இ-சேவை மையங்களில் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ் உள்ளிட்டவை பெறலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. பள்ளிக் கல்வித்துறையின் 23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலமாக பெற்றுகொள்ள வழிவகை செய்யும் அரசாணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 23 வகையான பள்ளி சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலம் மாணவர்கள் பெற்றுக்கொள்ள புதிய திட்டம் வகுக்கப்பட்டியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பை அமல்படுத்தும் வகையில் தற்போது அரசாணை வெளியாகியுள்ளது. இதனால் இனி மாணவர்கள், பொதுமக்கள் இனி இ-சேவை மையங்கள் […]

certificates 6 Min Read
Default Image

#BREAKING: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பார்வையாளர்கள் நியமனம் – தமிழக அரசு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தேர்தல் பார்வையாளர்களாக நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பார்வையாளர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, 33 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் 20 மாவட்ட வருவாய் அலுவலர்கள் தேர்தல் பார்வையாளர்களாக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ள நிலையில், அதற்கான பணியில் மாநில தேர்தல் ஆணையமும், தமிழக […]

election2022 3 Min Read
Default Image

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆலோசனை மையம் – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அடுத்து என்ன படிக்கலாம்? என்ன படிப்புக்கு வேலைவாய்ப்பு அதிகமாக உள்ளது? என்பதற்கான ஆலோசனை மையம் அமைக்க அரசாணை வெளியீடு. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 9 – 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்த ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் வழங்குவதற்கு ஆலோசனை மையம் அமைக்க நிதி ஒதுக்கி பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. மாணவர்களுக்கு முன்னாள் மாணவர்களை கொண்டு தொடர் நெறிப்படுத்தும் முறை, ஆலோசனை மையம் மற்றும் தொடர் […]

- 3 Min Read
Default Image

#ELECTION BREAKING: நகர்ப்புற தேர்தல்- ஐஜேகே தனித்து போட்டி..!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இந்திய ஜனநாயகக் கட்சி தனித்து போட்டியிடுகிறது என தலைவர்  ரவி பச்சமுத்து அறிவிப்பு. சென்னை அசோக் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய ஜனநாயகக் கட்சி தலைவர்  ரவி பச்சமுத்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இந்திய ஜனநாயகக் கட்சி தனித்து போட்டியிடுகிறது. மக்களின் செல்வாக்குடன் இந்திய ஜனநாயகக் கட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திக்க உள்ளது. அனைத்து மக்களுக்கும், அனைத்து வாய்ப்புகளும் கிடைக்க வேண்டும் என்பதே கட்சியின் நோக்கம்.  பல்வேறு துறைகளில் மக்களுக்கு தேவையானதை […]

election 2022 2 Min Read
Default Image

அனந்த நாகேஸ்வரனுக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்து ட்வீட்..!

மத்திய நிதியமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக (CEA) நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் ஆனந்த நாகேஸ்வரனுக்கு முதற் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து ட்வீட்.  மத்திய நிதியமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக (CEA) டாக்டர் ஆனந்த நாகேஸ்வரன் நியமனம் செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது.  பிப்.1-ல் மத்திய பொது பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில், புதிய தலைமை பொருளாதார ஆலோசகர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அனந்த நாகேஸ்வரனுக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘பொருளாதாரத்தை நிர்வகிக்கும் […]

- 2 Min Read
Default Image