எலான் மஸ்க்: உலகின் தலைசிறந்த பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ஆப்பிள் – ஓபன் ஏஐ விவகாரத்தில் தப்பாட்டம் படத்தின் போஸ்டரை பகிர்ந்து விமர்சித்துள்ளார். உலகின் மாபெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தற்போது விண்வெளி ஆராய்ச்சியில் தனது ஆர்வத்தை காட்டி கொண்டிருக்கிறார். அதில் இணைய சேவையை வழங்கும் செயற்கைக்கோள்களை செலுத்துவது எப்படி? என்றும் ஒரு ராக்கெட்டை எப்படி மீண்டும் பயன்படுத்துவது என அவர் ஆராய்ச்சியில் தொடர்ந்து தனது கவனத்தை செலுத்தி கொண்டு வருகிறார். மேலும், டெஸ்லா நிறுவனத்தின் […]
தென் கொரியா : உலகளவில் முன்னணி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சாம்சங் நிறுவனத்தில், சம்பள உயர்வு கோரி சுமார் 28,400 ஊழியர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த்தில் ஈடுபட்டுள்ளனர். சாம்சங் ஸ்மார்ட்போன் நிறுவனம் தொடங்கி 55 ஆண்டுகளில் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. AI தொழில்நுட்பத்தின் ஆதிக்கத்தால், வேலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளாக போராட்டக்காரர்கள் புலம்பிக் கொண்டு வருகிறார்கள். உலகின் மிகப்பெரிய மெமரி சிப்ஸ் தயாரிப்பாளர்களான அந்நிறுவனத்தின் நிர்வாகம், ஜனவரி […]
பேடிஎம் யூபிஐ: நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள தகவலின்படி கடந்த ஜனவரி மாதத்தில் மொத்த யூபிஐயின் பரிவர்த்தனைகளில் பேடிஎம் 13% சதவீதமாக இருந்து வந்துள்ளது. ஆனால் கடந்த மே மாதம் இறுதியில் அது 8.1% ஆக இறக்கம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். பேடிஎம் பயனர்களின் சில புகார்களின் அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம், பேடிஎம் பேமெண்ட்ஸ் துணை நிறுவனத்தின் செயல்பாடுகளை நிறுத்த வேண்டுமென கடந்த ஜனவரி மாதம் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) உத்தரவிட்டது. இதன் […]
நெட்ஃபிலிக்ஸ்: அமெரிக்கா நிறுவனமான நெட்ஃபிலிக்ஸ் வருகிற ஜூலை-31 முதல் ஆப்பிள் டிவியின் ஒரு சில பழைய ஜெனெரேஷன் (Generation) டிவிகளுக்கு., குறிப்பாக 2-வது மற்றும் 3-வது ஜெனெரேஷன் மாடல்களுக்கான ஸ்ட்ரீமிங்கை நிறுத்த போவதாக நெட்ஃபிலிக்ஸ் பயனர்கள் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், பழைய ஆப்பிள் டிவியின் ஜெனரேஷன் உபயோகிப்போர்கள் உடனடியாக புதிய டிவிகளுக்கு அப்டேட் செய்ய நெட்ஃபிலிக்ஸ் கேட்டுக்கொண்டதாக பயனர்கள் கூறுகின்றனர். இது எல்லா ஆப்பிள் டிவிகளுக்கும் இல்லாமல் புதிய ஆப்பிள் டிவிகளான 2015-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் […]
எலான் மஸ்க் : பயனர்களின் தரவை வாட்ஸ்அப் ஒவ்வொரு இரவும் ஏற்றுமதி ( exports ) செய்வதாக எலான் மஸ்க் குற்றம்சாட்டியுள்ளார். டெஸ்லா மற்றும் எக்ஸ் வலைதளத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் அடிக்கடி தன்னுடைய எக்ஸ் வலைதள கணக்கில் வேடிக்கையான விஷயங்களை பதிவிடுவதும், பயனர்களுக்கு பதில் அளித்தும் வருவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், பயனர் ஒருவர் மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ்அப் பற்றி குற்றச்சாட்டை முன்வைத்த ஒரு கேள்விக்கு எலான் மஸ்க் பதில் அளித்துள்ளார். […]
AI Overview: கூகுள் AIயில் குழப்பமில்லை என்றும், பயனர்களின் சில வினாக்களுக்கு மட்டும் நையாண்டி கட்டுரைகளின் அடிப்படையில் பதில் அளிக்கப்பட்டுள்ளது என கூகுள் அதிகாரி தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப உலகில் முன்னணியில் செல்ல கூகுள் நிறுவனமும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தற்போது பயனர்கள் மத்தியில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் கூகுள் AI ஓவர்வியூ (Google AI Overview), அதன் செயல்பாட்டில் சில விமர்சனங்ளை எதிர்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக, நேற்று ஓர் பயனர், கூகுள் […]
சிம் கார்ட் மோசடி : சிம் கார்ட் மூலமாக மோசடி நடைபெற்று வருவதால் அதிலிருந்து எப்படி நம்மை பாதுகாத்து கொள்ளலாம் என்பது பற்றி இதில் பாப்போம். பல நூதன முறைகளில் பல மோசடிகள் நம்மை சுற்றிலும் நடைபெற்று வருகிறது. தற்போது, சிம் கார்ட் மூலமாக புதிய வர்த்தக ரீதியான மோசடி நடைபெற்று வருகிறது. இந்த மோசடியில் உங்களுக்கே தெரியாமல் உங்கள் பெயர், உங்களது ஆவணங்களை பயன்படுத்தி மோசடி கும்பல் மோசடி செய்து கொண்டு வரலாம். தற்போது அந்த […]
கூகுள்: இந்திய பெருங்கடல் வழியாக ஆப்பிரிக்கா , ஆஸ்திரேலியா நாடுகளை இணைக்கும்படி உமோஜா எனும் உலகின் முதல் பைபர் ஆப்டிக் பாதையை கூகுள் செயல்படுத்த உள்ளது. உலகளவில் டிஜிட்டல் இணைப்பை அதிகபடுத்தவும், பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தவும், ஆப்பிரிக்கா முழுவதும் டிஜிட்டல் வளர்ச்சியை ஆழப்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு முயற்சிகளில் கூகுள் புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. இதனை கூகுள் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் […]
ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ : கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ‘ஒன்பிளஸ் ஏஸ் 3’ ஸ்மார்ட்போனின் அடுத்த வெறியன்ட் ஆன, ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒன்பிளஸ் நிறுவனம் அவ்வப்போது, புதிய அம்சங்களுடைய ஸ்மார்ட்போன்களை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு ஏஸ் ஸ்மார்ட்போன்களின் வரிசையில், ஒன்பிளஸ் ஏற்கனவே இரண்டு மாடல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏஸ் 3 மற்றும் ஏஸ் 3வி ஆகும். இப்போது, ஒன்பிளஸ் […]
சென்னை : தங்களுக்கு ஏற்ப்பட்ட நஷ்டம் காரணமாக பேடிஎம் நிறுவனம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பிரபல டிஜிட்டல் பரிவர்த்தனை நிறுவனமான பேடிஎம் இந்த ஆண்டு தொடர்ச்சியாக சரிவை கண்டு வருகிறது என்றே சொல்லலாம். குறிப்பாக, பேடிஎம் (Paytm) நிறுவனத்தின் தாய் நிறுவனமான “ஒன்97 கம்யூனிகேஷன்ஸ்” (One97 Communications) கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்தே வருவாயில் 2.60 சதவீத சரிவை கண்டது. இப்படி பெரிய சரிவை கண்டதால் நிகர நஷ்டம் 550 கோடி […]
சென்னை : வாட்ஸ் அப் நீண்ட நாள் பிரச்சனைக்கு தீர்வு கொண்டு வந்து இருக்கிறது. உலகம் முழுவதும் பலரும் பயன்படுத்திக்கொண்டு இருக்கும் வாட்ஸ்அப்பில் மெட்டா நிறுவனம் பயணர்களுக்கு அட்டகாசமான பல அப்டேட்டுகளை கொண்டு வந்துகொண்டு இருக்கிறது. அந்த வகையில், தற்போது ‘Delete For Me’ என்ற அசத்தலான அப்டேட்டை கொண்டு வந்து இருக்கிறது. இந்த அப்டேட் மூலம் என்ன பலன் என்று நீங்கள் கேட்பது எங்களுக்கு தெரிகிறது. நம்மில் பலரும் தவறுதலாக யாருக்காவது மெசேஜ் செய்துவிட்டோம் என்றால் அவர்கள் […]
CMF Phone 1 : நத்திங் (Nothing) நிறுவனத்தின் துணை பிராண்டான CMF தனது முதல் ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. நத்திங் (Nothing) நிறுவனம் சமீபத்தில் அதன் சிஎம்எஃப் (CMF) என்ற தனது துணை பிராண்டை அறிமுகம் செய்தது. CMF பிராண்டின் கீழ், இதுவரை Earbuds, Headphones, Smartwatch மற்றும் GaN enkicharger போன்ற சாதனங்களை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது, சிஎம்எஃப் (CMF) பிராண்டின் கீழ், முதல் 5G ஸ்மார்ட்போன் அறிமுகமாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. […]
சென்னை: நியுராலிங்க் நிறுவனம் உருவாக்கிய டெலிபதி சிப் முன்னேற்றம் கண்டுள்ளது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் சமூக வலைதள பக்க நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க், நியூராலிங்க் எனும் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் மூலம், கை, கால் செயலிழந்த ஒரு மனிதன் தான் நினைக்கும் செயலை கணினி , மொபைல் வாயிலாக செய்ய நினைக்கும் செயல்களை செய்யும்படியாக மூளையில் பொருத்தும் வகையில் சிப் (Chip) தயாரிக்கும் […]
Samsung Galaxy F55 5G: நேற்றைய தினம் அறிமுகம் செய்யப்பட இருந்த கேலக்ஸி எஃப்55 5ஜி மொபைல் மே 27 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. தென் கொரிய நிறுவனமான சாம்சங் இந்திய சந்தையில், கேலக்ஸி எஃப்-சீரிஸின் புதிய மாடலான சாம்சங் கேலக்ஸி எஃப்55 5ஜி (Samsung Galaxy F55 5G) ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை ஒத்திவைத்துள்ளது. ஆனால், ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அது குறித்த விளக்கத்தையும் அந்நிறுவனம் குறிப்பிடவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள மே 27 […]
சென்னை : மழை பெய்யும் நேரத்தில் ஏசியை உபயோகப்படுத்தலாமா கூடாதா ? மழை பெய்யும் பொழுது பயன்படுத்தினால் என்ன ஆகும் என்பதை பற்றி இந்த தகவலில் நாம் தெளிவாக பார்க்கலாம். தமிழகத்தில் தற்போது கோடை காலம் நிலவி வருகிறது.இந்த கோடை காலத்தில் வெப்பத்திலிருந்து தப்பிக்க ஏசியை நாம் பயன்படுத்தி வருகிறோம். அது ஒன்றும் பெரிய விளைவை பயன்படுத்திடும் ஏசிக்கும், நமக்கும் ஏற்படுத்துவதில்லை. ஆனால், அதே சமயம் மழை பெய்யும் போது ஏசியை பயன்படுத்தலாமா என்ற குழப்பம் நம்மில் […]
Google Play Store : இனி கூகுள் பிளே ஸ்டோரில் டவுண்டலோடு செய்யும் அரசாங்கத்தின் ஆப்ஸ்களில் புதிய திட்டத்தை களமிறங்குகிறது கூகுள் நிறுவனம். கூகுள் நிறுவனம் பயனர்களை ஈர்ப்புடன் வைத்துக்கொள்ள புதிய புதிய முயற்சிகளை கையாண்டு கொண்டே வருகிறது. இந்நிலையில் தற்போது, அடுத்த கட்டமாக கூகுள் நிறுவனம் பிளே ஸ்டோரில் புதிய அம்சத்தை கொண்டு வர உள்ளது. அது என்னவென்றால் கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கும் அதிகாரப்பூர்வ அரசாங்க ஆப்ஸ்களுக்கு பயனர்கள் எளிதில் கண்டுபிடிக்கும் வண்ணம் புதிய […]
சென்னை: இந்தியா உட்பட உலக அளவில் மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவை முடங்கியது. பிரபல சமூக ஊடக பயன்பாடுகளான மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம், உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான பயனர்களுக்கு செயலிழந்துள்ளதாக டவுன்டெக்டர் என்ற செயலிழப்பு கண்காணிப்பு இணையதளம் தகவல் தெரிவித்துள்ளது. காலை 7 மணி முதல் இந்த சிக்கல் இருந்து வருகிறது, மெட்டாவின் பிரதான மையத்தில் சர்வர் தொடர்பான பிரச்சனைகள் தான் இதற்கு காரணமாக இருக்கலாம் என சமூக வளைத்தளத்தில் கூறப்பட்டு […]
சென்னை : ChatGPTயின் அடுத்தகட்ட வளர்ச்சியாக GPT-4o அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைக் கொண்டு செயல்பட்டு வரும் ஓபன் ஏஐ (OpenAI) நிறுவனம் ஏற்கனவே ChatGPT எனும் AI தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இதன் அடுத்தடுத்த புதிய அப்டேட்களை அவ்வப்போது வெளியிட்டு வரவேற்பை பெற்று வருகிறது ஓபன் ஏஐ நிறுவனம் . GPT 4-இன் தொடர்ச்சியாக தற்போது புதியதாக GPT 4o எனும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் […]
DALL-E 3 உள்ளிட்ட AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை, கண்டறிய OpenAI தனது புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்கிறது. விருப்பத்திற்கு ஏற்ப புகைப்படங்களை தாயர் செய்யும் DALL-E 3 உள்ளிட்ட AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்களைக் கண்டறிய, ஒரு புதிய தொழில்ட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஓபன் ஏஐ என்றால் என்ன? OpenAI என்பது ஒரு செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆராய்ச்சி நிறுவனமாகும், மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காத வகையில், நன்மை பயக்கும் AI தொழில்நுட்பங்களை […]
Google Down : கூகுள் தேடு பொறி, மற்றும் பிற கூகுள் சேவைகள் செயல்படவில்லை என சில பயனர்கள் புகார் அளித்து வருகின்றனர். நாம் உபயோகிக்கும் இணையத்தில் பல்வேறு தேடுதளங்கள் அதாவது தேடுபொறிகள் (Search Engine) இருந்தாலும் நமக்கெல்லாம் எளிமையாகவும் உலகின் பலதரப்பட்ட மக்களால் உபயோகிக்கும் ஒரு தேடுபொறி தான் கூகுள் தேடுபொறி (Google Search Engine). இப்படி இருக்கயில் நேற்றைய தினம் உலகம் முழுவதும் பல்வேரு இடங்களில் கூகுள் தேடு பொறியை பயன்படுத்தும் பலதரப்பு மக்கள் […]