4 வருட காதல்... 4 நாட்களுக்கு முன் திருமணம்... உண்மையை உடைத்த நடிகை ஆனந்தி!

After being in love for 4 years, actress Kayal Anandi has been married to co-director Socrates for the past four days.

4 ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பதாக நடிகை கயல் ஆனந்தி இணை இயக்குனர் ஆகிய சாக்ரடீஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தமிழ் திரை உலகில் பொறியாளன் எனும் படத்தில் நடித்ததன் மூலம் 2014ஆம் ஆண்டு அறிமுகமாகிய நடிகை தான் ஆனந்தி. இவர் தெலுங்கானாவை சேர்ந்தவர், 2012ஆம் ஆண்டு முதலே தெலுங்கில் சில படங்களில் நடித்து வந்த இவர், அதன்பின் தமிழ் திரையுலகில் கயல் எனும் படத்தில் நடித்து கயல் ஆனந்தி எனும் பெயருடன் பிரபலமாகி, தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். கயல் ஆனந்தி கயல் படத்திற்கு பின்பதாக த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, சண்டிவீரன், விசாரணை, கடவுள் இருக்கான் குமாரு, ரூபாய், பரியேறும் பெருமாள் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் கயல் ஆனந்திக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் அவ்வளவாக திரையுலக வட்டாரங்களுக்கோ அல்லது ரசிகர்களுக்கோ இந்த நிகழ்வு தெரியவில்லை.

தற்பொழுது இதுகுறித்து கயல் ஆனந்தி உண்மை உடைத்துள்ளார். இவர் மூடர்கூடம் படத்தை இயக்கிய நவீன் அவர்களின் மைத்துனர் சாக்ரடீஸ் என்பவரை தான் திருமணம் செய்து கொண்டுள்ளார். கயல் ஆனந்தி திருமணம் செய்து கொண்டுள்ள சாக்ரடீஸ் என்பவர் அலாவுதீனின் அற்புத கேமரா, அக்னிசிறகுகள் ஆகிய படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். இந்த படங்களில் நடித்த பொழுது கயல் ஆனந்திக்கும் சாக்ரடீஸுக்கு காதல் ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

unknown node

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள கயல் ஆனந்தி, தானும் சாக்ரடீஸும் கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வந்ததாகவும், இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வதற்காக காத்திருந்து, அந்த நாள் சமீபத்தில் அமைந்ததால் பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் ஜனவரி 7 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார். மேலும் தனது திருமணம் சினிமாலிருந்துதான் விலகுவதற்கு காரணமாக இருக்காது எனவும், தொடர்ந்து தான் நடிக்க உள்ளதாகவும், தற்பொழுதும் தனது கையில் நான்கு படங்கள் உள்ளதாகவும், அதில் முதலில் நடித்துக் கொடுத்து விட்டு அதன் பின், கிடைக்கும் வாய்ப்புகளையும் தவறவிடாமல் படத்தில் நடிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.