ஓட்டு போட முடியாமல் போனது மனசு வேதனையா இருக்கு -சூரி!

Published by
பால முருகன்

Soori  : தனது பெயர் விடுபட்டதால் வாக்களிக்க முடியவில்லை என நடிகர் சூரி வேதனையுடன் பேசியுள்ளார்.

இன்று (ஏப்ரல் 19) -ஆம் தேதி நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், இன்று காலை 7 மணி  முதல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பொது மக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாக்குகளை செலுத்திக்கொண்டு இருக்கும் நிலையில், சூரி வாக்கு செலுத்த வந்துவிட்டு வாக்களிக்க முடியாமல் திரும்பி சென்றுள்ளார். அவருடைய பெயர் விடுபட்ட காரணத்தால் அவரால் வாக்களிக்க முடியாமல் போய்விட்டது. ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய சூரி செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டியில் வேதனையுடன் பேசியுள்ளார்.

இது குறித்து பேசிய நடிகர் சூரி ” என்னுடைய ஜனநாயக உரிமையை செலுத்துவதற்கு நான் இங்கு வந்தேன். இதுவரை கடந்த எல்லா தேர்தல்களிலும் நான் என்னுடைய வாக்குளை செலுத்துவதற்கு இங்கு வந்தேன். வந்த எல்லாமுறையும் நான் என்னுடைய வாக்கை செலுத்தினேன். ஆனால், இந்த முறை என்னால் வாக்கு செலுத்தமுடியவில்லை.

என்னுடைய பெயர் இந்த முறை இடம்பெறாமல் விடுபட்டு போச்சு. ஆனால், என்னுடைய மனைவியின் பெயர் இருக்கிறது என்னுடைய பெயர் மட்டும் தான் இல்லை . கேட்டதற்கு என்னுடைய பெயர் விடுபட்டு போய்விட்டது என்று கூறுகிறார்கள். ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக ஆசையுடன் வந்தேன். ஆனால், ஆற்றமுடியவில்லை என்பது மன வேதனையாக இருக்கிறது.

இது எங்கே யாருடைய தவறு எப்படி நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. ஒட்டு போட்டு விட்டு அனைவரும் ஒட்டு போடுங்கள் என்று கூறலாம் என நினைத்தேன். ஆனால், இப்போது ஒட்டு போட முடியவில்லையே என்ற வேதனையுடன் கூறுகிறேன் தயவு செய்து அனைவரும் 100% வாக்களியுங்கள்” என சூரி வேதனையுடன் கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

திருவிழா பிரச்சனையா? இரு தரப்பினர் மோதல்., வீடுகளுக்கு தீ வைப்பு! புதுக்கோட்டை காவல்துறை விளக்கம்!

புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…

33 minutes ago

SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…

8 hours ago

ஹைதராபாத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.., போட்டி தொடங்குவதில் தாமதம்.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

9 hours ago

SRH vs DC : 3 விக்கெட்களை தூக்கிய கம்மின்ஸ்.., ரன் எடுக்க முடியாமல் திணறிய டெல்லி.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

10 hours ago

”மே 5ம் தேதி வணிகர் தினம்.., வணிகர்களுக்கு 6 அறிவிப்புகள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…

10 hours ago

நடிகர் கவுண்டமணியின் மனைவி உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி.!

சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…

11 hours ago