surya house in chennai [File Image]
சென்னை: சென்னையில் உள்ள நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக இலவசமாக போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
நடிகர் சூர்யா கடந்த ஆண்டு சென்னையில் இருந்து மும்பைக்கு தனது வீட்டை மாற்றி கொண்டார். ஆம், மும்பையில் ரூ.70 கோடிக்கு மேலாக ஒரு ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பில் சூர்யா தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
2021 ஆம் ஆண்டு வெளியான ஜெய் பீம் திரைப்படம், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தவறாக காட்டியதாக எதிர்ப்பு எழுந்ததால், பாமக-வினர் சார்பில், படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் சூர்யா மீது புகார் அளிக்கப்பட்டது.
அந்த சமயத்தில் இந்த விவகாரம் பெரிய அளவில் சென்றதால், சென்னை தி.நகரில் உள்ள நடிகர் சூர்யாவின் வீட்டுக்கு பாதுகாப்பு அழிக்கப்பட்டு வந்தது. தற்பொழுது, நிலைமை சரியாகிய பின்பும், நடிகர் சூர்யா மும்பைக்கு சென்றபிறகும், இன்று வரை ஆயுதம் ஏந்திய போலீசார் 4 பேர் தினசரி பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அமைச்சரின் பரிந்துரையில் தான் இலவசமாக போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவது தெரிய வந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, சூர்யா குடும்பத்துடன் மும்பையில் வசித்து வரும் நிலையில், அவரது சென்னை வீட்டுக்கு அரசு செலவில் பாதுகாப்பு ஏன் என பலர் கேள்வி எழுப்புகின்றனர்.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…