நடிகை கோய்னா மித்ராவிற்கு 6 மாதம் சிறை தண்டனை !

பாலிவுட் நடிகையான கோய்னா மித்ரா இந்தியில் முஸாபர் என்ற படத்தில் இடம் பெற்ற “சகி சகி ” என்ற பாடலுக்கு நடனமாடி இருந்தார்.அதன் பின்னர் கோய்னா மித்ரா மிகவும் பிரபலமானார்.
மேலும் நடிகை கோய்னா தமிழில் குத்து பாடல்களுக்கு நடனமாடி உள்ளார். தமிழில் தூள் படத்திலும் ,அயன் படத்திலும் ,அசல் படத்திலும் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார்.இவர் 2013 -ம் ஆண்டு மாடல் அழகி பூனம் சேத்தி என்பவரிடம் ரூ.22 லட்சம் பணத்தை கடனாக வாங்கி உள்ளார்.
கோய்னா மித்ரா பணத்தை திருப்பி தரவில்லை இதை தொடர்ந்து 2013 -ம் ஆண்டு டெல்லி நீதிமன்றத்தில் பூனம் சேத்தி வழக்கு கொடுத்தார்.அந்த வழக்கில் கோய்னா மித்ரா தன்னிடம் வாங்கிய ரூ.22 லட்சம் பணத்தை தரவில்லை எனவும் , ரூ . 2 லட்சம் காசோலையாக கொடுத்தார். ஆனால் வங்கி கணக்கில் பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டது என கூறினார்.
இந்த வழக்கு டெல்லியில் உள்ள பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்று நேற்று முன்தினம் தீர்ப்பு வழக்கப்பட்டது.அந்த தீர்ப்பில் நடிகை கோய்னாவிற்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவு விட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025