நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த 16 பிரபலங்களில் பாத்திமா பாபு மற்றும் வனிதா இருவரும் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், கவின் மற்றும் சாக்ஷிக்கு இடையே கடந்த சில நாட்களாக வாக்குவாதம் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, சாக்ஷியிடம் கவின் பேசும் போது, கவின் கலங்கிய கண்களுடன் மன்னிப்பு கேட்கிறார்.
unknown node