biggboss 3: போலிஸாருக்கு வாக்குறுதி அளித்த வனிதா!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது நடைபெற்று வருகிற நிலையில், இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனிதா, தற்போது ஒரு சிக்கலில் சிக்கியுள்ளார்.
இந்நிலையில், வனிதாவின் கணவர் ஆனந்தராஜ், தனது மகளை வனிதா கடத்திவிட்டதாக அவர் மீது தெலுங்கானா போலீசாரிடம் புகாரளித்தார். இந்த புகாரின் பேரில் வனிதா மீது ஆள்கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் வனிதாவை, நசரத்பேட்டை போலிஸாரின் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து, வனிதா போலிஸாருக்கு ஒரு வாக்குறுதி அளித்துள்ளார். அவர் கூறியதாவது, மாலை 5 மணிக்கு பிறகு தனது பாதுகாப்பில் உள்ள ஜெனிதாவை அழைத்து வர சம்மதம் தெரிவிப்பதாக கூறியுள்ளார். மேலும், போலீசார் மகளிடம், அப்பாவிடம் செல்ல விருப்பமா அல்லது அம்மாவிடம் செல்ல விருப்பமா என கேட்டு முடிவு செய்யவுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025