தனுஷ் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருவதால், மீண்டும் படம் இயக்குவதை தற்போது நிறுத்தி வைத்துள்ளார். அதனால், தற்போதைக்கு இயக்குனர் தனுஷை திரைக்கு பின்னால் பார்ப்பது கடினம் என்கிறது கோலிவுட் வட்டாரம்.
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் அடுத்ததாக மாறன் திரைப்படம் திரைக்கு வர தயாராகி விட்டது. இந்த படத்தை கார்த்திக் நரேன் இயக்கி உள்ளார். சத்ய ஜோதி பிலிம்ஸ் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது.
அதனை தொடர்ந்து, மித்ரன் ஆர்.ஜவகர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து வருகிறார். அதே போல செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
நடிகர் தனுஷ் இயக்குனர் தனுஷாக பா.பாண்டி எனும் திரைப்படத்தை எடுத்திருந்தார். ராஜ்கிரண் ஹீரோவாக நடித்த அந்த திரைப்படம் வெற்றியடைந்தது. அதனை தொடர்ந்து புதிய படம் இயக்க தனுஷ் திட்டமிட்டிருந்தார். இந்த திரைப்படத்தில் நாகார்ஜுனா, அதிதி ராவ் ஹைதரி, சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிப்பதாக கூறப்பட்டது.
ஆனால் படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்காமல் இருந்து வருகிறது. அது எப்போது நடக்கும் என விசாரித்தால், தற்போது தனுஷ் முழுக்க முழுக்க நடிப்பில் தான் கவனம் செலுத்த உள்ளாராம். அதனால், இன்னும் 2 வருடங்களுக்கு இயக்குனர் தனுஷை பார்ப்பது கடினம் என கூறப்படுகிறது. அப்போது நடைபெற்றாலும் மீண்டும் அதே நட்சத்திர கூட்டணி நடிப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…
சென்னை : குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…