கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு இன்று காலமானார்!

Popular character actor and comedian Pandu died at a hospital here this morning due to a corona infection.

கொரோனா தொற்றின் காரணமாக பிரபல குணசித்திர நடிகரும் நகைச்சுவை நடிகருமாகிய பாண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நாடு முழுவதும்  கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டேதன் செல்கிறது. தினமும் லட்சக் கணக்கானோர் பாதிக்கப்படும் நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். அதிலும் அரசியல்வாதிகள், பிரபலங்கள் மற்றும் பல்வேறு நட்சத்திரங்களும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்து கொண்டிருக்கின்றனர். தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்தவர் தான் நடிகர் பாண்டு. இவருக்கு தற்போது 74 வயது ஆகிறது.

இவருக்கு பாண்டு மற்றும் குமுதா தம்பதியினருக்கு பிரபு, பஞ்சு மற்றும் பின்டு ஆகிய மூன்று ஆண் மகன்கள் உள்ளனர். இவர்கள் கேப்பிடல் லெட்டர்ஸ் எனும் நிறுவனத்தையும் தற்பொழுது நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பாண்டு மற்றும் அவரது மனைவி ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனை அடுத்து பாண்டு மற்றும் அவரது மனைவி ஆகிய இருவருமே சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நலையில் பாண்டுவின் மனைவி ஏற்கனவே தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவரின் கண்காணிப்பில் கவனிக்கப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், இன்று அதிகாலை பாண்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.