கடந்த 2014-ஆம் ஆண்டு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பாபி சிம்ஹா , சித்தார்த், குரு சோமசுந்தரம், லட்சுமி மேனன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் “ஜிகர்தண்டா”. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை படைத்தது.
unknown node“ஜிகர்தண்டா” படம் வெளியாகி சமீபத்தில் 8 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி “ஜிகர்தண்டா – 2′ படத்துக்கான எழுத்துப்பணிகள் தொடங்கிவிட்டதாக கார்த்திக் சுப்புராஜ் அறிவித்திருந்தார்.
இதையும் படியுங்களேன்-எல்லாம் முடிந்ததும் சகோதரியாக ஆயிடுவேன்… விக்ரம் செய்த செயல்… உண்மையை உளறிய சதா…
unknown nodeஆனால், படத்தில் கதாநாயகனாக யாரு நடிக்கிறார் என்ற எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனையடுத்து, தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், ஜிகர்தண்டா – 2 படத்தில் கதாநாயகனாக நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளாராம். இவரை வைத்து தான் கதை தொடரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
unknown nodeராகவா லாரன்ஸ் தற்போது சந்திரமுகி 2, ருத்ரன், அதிகாரம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் முதலில் ருத்ரன் திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.