பிரமாண்டத்திற்கு பிரமாண்டம் சேர்க்கும் கே.ஜி.எப் குழு.! புதியதாக களமிறங்கும் பாகுபலி.!

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 14-ஆம் தேதி வெளியான கேஜிஎப் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 14-ஆம் தேதி வெளியான கேஜிஎப் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது. உலகம் முழுவதும் 1000 கோடி வசூலைக் கடந்து இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

unknown node

இந்த படத்தின் முடிவில் கேஜிஎப்- 3 தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.  இதனால் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் மூன்றாவது பாகத்தை பார்க்க காத்துள்ளனர். அதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கவிட்டது.

unknown node

இந்த நிலையில் . பிரசாந்த் நீல்  தற்போது நடிகர் பிரபாசை வைத்து சலார்  என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  மூன்று மாதத்தில் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு விரைவில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

unknown node

இந்த படத்தை முடித்த பிறகு இயக்குனர் பிரசாந்த் நீல் கேஜிஎப் 3 படத்திற்கான வேலையை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் கேஜிஎப் 3 படத்தில் சில காட்சிகளில் நடிகர் பிரபாஸ் வருகிறாராம். இதனால் கூடுதலாக படத்தின் மீது எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.