நடிகை சுர்வீன் சாவ்லா பிரபலமான இந்திய நடிகை ஆவார். இவர் தமிழில் ‘மூன்று பேர் மூன்று காதல்’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் பஞ்சாபி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சினிமா வட்டாரத்தை பொறுத்தவரையில், சமீப காலமாக நடிகைகள் சினிமா வாய்ப்பிற்காக பாலியல் ரீதியான தொந்தரவுகளை சந்திப்பதாக புகார் அளித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகை சுர்வீன் சாவ்லா அளித்த பெட்டியில், ‘பட வாய்ப்பிற்காக இயக்குனர் ஒருவர் எனது மார்பு பகுதியை பார்க்க வேண்டும் என்று கூறினார். மற்றோரு இயக்குனர் உங்களது தொடையை நான் பார்க்க வேண்டும்.’ என்று கேட்டார் கூறியுள்ளார்.