ஹிப்ஹாப் தமிழா ஆதியின் அடுத்த மாஸ் மூவி!

ஹிப்ஹாப் ஆதி ஆல்பம் சாங்ஸ் மூலம் தனது திறமையை அனைவரிடமும் கொண்டு சேர்த்தார்.பின்னர் இவரது திறமையை புரிந்து கொண்ட பிரபல இயக்குனர் சுந்தர்.சி தாம் தயாரிக்கும் படத்தில் அவரை இசையமைக்க கூறியுள்ளார்.
அதன் பின்பு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட ஹிப்ஹாப் ஆதி தனது முதல் படத்திலேயே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார்.இதனை தொடர்ந்து சமீபத்தில் இவர் நடிப்பில் இரண்டாவது படமான நட்பே துணை படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்த இரண்டு படங்களையும் சுந்தர்.சி-யே தயாரித்துள்ளார்.மேலும் தற்போது ஹிப்ஹாப் ஆதியின் மூன்றாவது படத்தையும் சுந்தர்.சி தான் தயாரிக்கிறார்.இப்படத்தை பிரபல இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனரான ராணா இயக்கி வருவதாக கூறப்படுகின்றது.
எனவே இந்த படமும் வெற்றியை தரும் என படக்குழு தெரிவித்துள்ளன.