எனக்கு தலைக்கனமா…? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த இசைஞானி இளையராஜா.!!

Published by
பால முருகன்

இசையமைப்பாளர் இளையராஜா பல ஆண்டுகளாக சினிமாத்துறையில், இசையமைத்து வருகிறார். பலரும் இளையராஜாவுக்கு தலைக்கனம் அதிகமாக இருக்கிறது என விமர்சனங்கள் செய்வது உண்டு. குறிப்பாக சமீபத்தில் கூட சக இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் இளையராஜாவை கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார்.

Ilaiyaraaja [Image source : file image ]

மேலும், இளையராஜா சமீபத்தில் மறைந்த காமெடி நடிகர் மனோபாலாவின் மறைவுக்கு இரங்கலை தெரிவித்து சமூக வலைதள பக்கங்களில் வீடியோ ஒன்றை வெளியீட்டு இருந்தார். வீடியோவில் ‘ஆரம்ப காலகட்டத்தில் கோடம்பாக்கம் பக்கத்தில் எனக்காக காத்திருந்த எத்தனையோ இயக்குனர்களின் மனோபாலாவும் ஒருவர். அவருடைய மறைவு வேதனையாக இருக்கிறது என கூறியிருந்தார்.  அந்த வீடியோவை பார்த்த பலரும் இது இரங்கல் தெரிவிப்பது போல இல்லை என்பது போல  விமர்சித்தனர்.  இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட இளையராஜா விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பேசியுள்ளார்.

Ilaiyaraaja [Image source : twitter/ @ilaiyaraaja
]

இது குறித்து பேசிய இசையமைப்பாளர் இளையராஜா ” பொதுவாகவே நான் இசையமைக்கும்போது என்னுடைய இசையுடன் போட்டியிடுவேன். மற்றபடி மற்றவர்கள் சொல்வது போல எனக்கு எதுவும் தெரியாது. எனக்கு அதிகமாக தலைக்கனம் இருப்பதாக சிலர் கூறுகிறார்கள். நான் தலைக்கனம் கொண்டவன் என்றால் அப்படி சொல்பவனுக்கு எவ்வளவு தலைக்கனம் இருக்கும்.

Ilaiyaraaja [Image source : twitter/ @ilaiyaraaja
]

நான் தூக்கி எறிந்து பேசுகிறேன் என்று யாரும் நினைக்கவேண்டாம். எனக்கான கேள்விக்கு நான் தான் பேசவேண்டும். எனவே, நான் பேசுவதை நீங்கள் தலைக்கணம் என்று கூறினாலும் சரி  எனக்கு இது பற்றியெல்லாம் கவலை இல்லை நான் என்னுடைய இசைப்பாதையில் சென்றுகொண்டு இருக்கிறேன்” என விளக்கம் கொடுத்துள்ளார்.

Ilaiyaraaja [Image source : twitter/ @ilaiyaraaja
]

விமர்சனங்களுக்கு இளையராஜா பதிலடி கொடுத்துள்ள நிலையில், அவருடைய ரசிகர்கள் பலரும்  நெத்தியடியாக பதிலடி கொடுத்தீர்கள் எனவும் ஹேட்டர்ஸ்களுக்கு தரமான பதிலடி எனவும் கருத்துக்களை கூறி  வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

3 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

4 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

4 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

6 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

6 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

7 hours ago