நான் இந்த படங்களை எல்லாம் பாக்கவே மாட்டேன்.! பேட்ட வில்லனின் சர்ச்சை பேச்சு.!

தமிழ் சினிமாவில் கடந்த 2019-ஆம் ஆண்டு ரஜினி நடித்த “பேட்ட” திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக்.
இவரிடம் சமீபத்தில் புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் -2 ஆகிய தென்னிந்திய திரைப்படங்களுக்கு சமீபத்தில் வட இந்தியாவிலும் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது இதுகுறித்து உங்கள் கருத்து என்ன என்று கேட்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலளித்த நவாசுதீன் ” பொதுவாக நான் இதுவரை தென்னிந்திய திரைப்படங்களை பார்த்ததே கிடையாது. அதனால், தென்னிந்திய திரையுலகம் குறித்த கேள்விக்கு நான் பதில் கூறுவது சரியாக இருக்காது. ஆனால் என்னால் ஒரு விஷயத்தை தெளிவாக சொல்லமுடியும்.
ஒரு திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றால் சிறிது காலத்துக்கு மக்கள் அந்த படத்தை பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள். படத்தின் கதை, திரைக்கதைகளின் தாக்கத்தில் பல படங்கள் வெளியாகும். இதில் எனக்கு ஒருபோதும் உடன்பாடு கிடையாது” என தெரிவித்துள்ளார். மேலும், இவர் பேசியது சர்ச்சயை கிளப்பியுள்ள நிலையில், தென்னிந்திய படங்களே பார்க்காத ஒருவர் ரஜினியுடன் பேட்டை படத்தில் எதற்காக நடித்தார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
June 17, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
June 17, 2025
”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!
June 17, 2025