மோடி மீண்டும் வெற்றிப்பெற்று பிரதமராகக் கூடாது என்பதே தமிழர்களின் உணர்வாக உள்ளதாக, இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தை கூறியுள்ளார்.
விஜயின் தந்தை சந்திரசேகர் மற்றும் அவரது மனைவி சோபாவும் பொறியியல் கல்லூரியில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது, மோடி மீண்டும் பிரதமராக கூடாது என்பதில் அனைவரும் தெளிவாக உள்ளதாகவும், தற்போதைய ஆட்சியில் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினர் மிகவும் அச்சமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது, சமூகத்திற்கு நல்லது செய்கிறவர்கள் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம் என்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார்.