சூப்பர் ஸ்டாரை இந்த அரசியல் என்ன செய்யுமோ என்பது தான் என் கவலை : இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் தர்பார் படம் குறித்தும் ரஜினிகாந்த் அரசியல் வருகை குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய இயக்குனர் முருகதாஸ், ‘ரஜினி சார் ரொம்ப ரொம்ப நல்ல மனிதர். யாரையும் தப்பாக பேசவே மாட்டார். இன்னும் சொல்லப்போனால், எல்லோரை பத்தியும் நல்ல விதமாகவே சொல்லுவார்.
மேலும், ரஜினி சகா மனிதனை அதட்ட மாட்டார். மனதில் தோன்றுவதை அப்படியே பேசுவார். சாதாரண கார்ல ஒற்றை ஆளா வருவார், போவார். ஆனால், இந்த அரசியல் சூப்பர் ஸ்டாரை என்ன செய்யுமோ என்பது தான் எனது கவலை.’ எனக் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!
June 22, 2025
“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!
June 22, 2025