படத்தை வெளியிடும் போது கூட ஒருவரும் உதவி செய்யவில்லை : பார்த்திபன்

பார்த்திபன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகரும், இயக்குனரும் ஆவார். இவ்வாறு பன்முக தன்மை கொண்ட இவர், தற்போது ஒத்ததச்செருப்பு என்ற படத்தில் அவர் ஒருவரே எல்லா

பார்த்திபன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகரும், இயக்குனரும் ஆவார். இவ்வாறு பன்முக தன்மை கொண்ட இவர், தற்போது ஒத்ததச்செருப்பு என்ற படத்தில் அவர் ஒருவரே எல்லா கதாபாத்திரங்களையும் தன்னுள் அடக்கி நடித்துள்ளார்.இப்படம் செப்.20 தேதி திரைக்கு வந்த நிலையில், அவரது ரசிகர்கள் மத்தியில் இப்படம் பாராட்டுக்களை பெற்றது. இப்படத்திற்கு, சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து பாராட்டியுள்ளனர்.இந்நிலையில்,  பார்த்திபன் அவர்கள் சென்னையில் சர்வதேச திரைப்பட விழாவிற்கான சின்னம் வெளியிடும் நிகழ்ச்சியில் பேசுகையில், ஒத்ததை செருப்பு படத்தை ஆஸ்கருக்கு அனுப்பவே செப்.20 வெளியிட்டதாக கூறியுள்ளார்.மேலும் அவர் கூறுகையில், ஒத்த செருப்பு படத்தை வெளியிடும் போது கூட ஒருவரும் உதவி செய்யவில்லை என்றும், படத்திற்கு நிறைய செலவு செய்துள்ளேன். படம் தொடர்ந்து ஓடிஏ வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

படத்தை வெளியிடும் போது கூட ஒருவரும் உதவி செய்யவில்லை : பார்த்திபன்