மலையாள சினிமாவின் முன்னணி நடிகையான அர்ச்சனா கவி, வெளியூர் செல்வதற்காக தனது குடும்பத்தினருடன் இணைந்து, கொச்சி விமான நிலையத்திற்கு சென்றுகொண்டிருந்த போது, அவரது காரின் முன்பகுதியில் திடீரென கான்கிரீட் துண்டு விழுந்தது.இந்த கான்கிரீட் துண்டு, கொச்சி மெட்ரோ பணிகள் நடக்கும் பாலத்தின் மேல் பகுதியில் இருந்து காரில் விழுந்துள்ளது. இந்த சம்பவத்தால் காரின் முன்பகுதி சேதமடைந்துள்ளது. மற்ற யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.இதனையடுத்து காரின் புகைப்படத்தை தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டு, கொச்சி மெட்ரோ நிர்வாகம் தனது டிரைவருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளார். இதற்கு பதிலளித்த மெட்ரோ நிர்வாகம், விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும், இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளது.
unknown nodeகாரில் விழுந்த கான்கிரீட் துண்டு! நூலிழையில் உயிர் தப்பிய பிரபல நடிகை! நடந்தது என்ன?
மலையாள சினிமாவின் முன்னணி நடிகையான அர்ச்சனா கவி, வெளியூர் செல்வதற்காக தனது குடும்பத்தினருடன் இணைந்து, கொச்சி விமான நிலையத்திற்கு சென்றுகொண்டிருந்த போது, அவரது