ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா ரஜினிகாந்த். மேலும், பல படங்களுக்கு கிராபிக்ஸ் மேற்பார்வையாளராகவும் பணிபுரிந்துள்ளார். இவர் பொன்னியின் செல்வன்’ சரித்திர நாவலை வெப் சீரிஸாக உருவாகிறார். இதனை எம்.எக்ஸ். ப்ளேயர் நிறுவனத்துடன் இணைந்து செளந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கிறார்.
பல்லாண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்த சோழ அரச பரம்பரையின் ஆட்சிக் காலத்தைப் பற்றிய விறுவிறுப்பும், வீரமும், தொன்மையும், காதல் மற்றும் நகைச்சுவையும் கலந்த காவியமாக இருக்கும். இந்த படம் வெப் சீரிஸாக உருவாக்கப்பட உள்ளது. மேலும் இது பொழுதுபோக்கான பரவசமான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.