படம் ரிலீஸ் அன்று நள்ளிரவு 2.30 மணிக்கே எழுந்து விட்டதாகவும் ,தூங்காமல் வீட்டில் உலவி கொண்டிருந்தேன். படம் வெற்றி பெற வேண்டும் என கடவுளிடம் வேண்டி கொண்டேன்.
இயக்குனர் ஷிவா நிர்வானா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் “மஜிலி ” இந்த படத்தில் நாக சைதன்யா கிரிக்கெட் வீரராக நடித்துள்ளார்.நடிகை சமந்தா நாக சைதன்யாவிற்கு ஜோடியாக நடித்து உள்ளார்.
தற்போது இப்படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெற்றது.அந்த விழாவில் “மஜிலி ” படக்குழுவும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகை சமந்தா படம் ரிலீஸ் தன்னுடைய மனநிலை எப்படி இருந்தது என்பதை கூறினார்.
அவர் கூறுகையில் படம் ரிலீஸ் அன்று நள்ளிரவு 2.30 மணிக்கே எழுந்து விட்டதாகவும் ,தூங்காமல் வீட்டில் உலவி கொண்டிருந்தேன். படம் வெற்றி பெற வேண்டும் என கடவுளிடம் வேண்டி கொண்டேன்.
காலையில் நன்கு முதல் படத்தை பற்றி ட்விட்டரில் பேச தொடக்கி விட்டனர். பிறகு தயாரிப்பாளர் படத்திற்கு கிடைத்த வெற்றியை பற்றி கூறினார். அவர் கூறிய பிறகு நான் அரை மணி நேரம் கண்ணீர் விட்டு அழுதேன்.
இந்த படம் மட்டும் வெற்றி பெறாமல் இருந்திருந்தால் என்ன சொல்வது என தெரியாமல் தான் இருந்தேன் என சமந்தா கூறினார்.
https://twitter.com/VishnuThejPutta/status/1114843823031504896