கால்ஷீட் கிடைச்சா போதும்! கவுண்டமணிக்காக காத்திருந்த ரஜினிகாந்த்!

Published by
பால முருகன்

Rajinikanth : கவுண்டமணியின் கால்ஷீட் கிடைக்கவேண்டும் என்று ரஜினிகாந்த் பாபா பட சமயத்தில் காத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பொதுவாக சினிமாவில் ஹீரோவாக படங்களில் நடிக்கும் ஹீரோக்களின் கால்ஷீட் கிடைப்பது தான் பெரிய பிரச்சனையாக இருக்கும் . ஆனால், கவுண்டமணி காமெடியான கதாபாத்திரங்களில் நடித்து கொண்டு பீக்கில் இருந்த சமயத்தில் அவருடைய கால்ஷீட்காக நடிகர் ரஜினிகாந்தே காத்து இருந்தாராம். கவுண்டமணி நடித்து கொண்டு இருந்த காலத்தில் எல்லாம் அவருடைய காமெடி காட்சிகளை வைத்தே பல படங்கள் ஹிட்டும் ஆகி இருக்கிறது.

அந்த சமயம் எல்லாம் இதன் காரணமாகவே பல முன்னணி ஹீரோக்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தங்களுடைய படங்களில் கவுண்டமணி வேண்டும் என்று அடம் பிடித்து இருக்கிறார்கள். அப்படி தான் ரஜினிகாந்தும் கூட கவுண்டமணிக்காக ஒரு முறை காத்திருந்து அவருடைய கால்ஷீட் கிடைத்தால் போதும் என்று நினைத்தாராம். ஒரு முறை பாபா படத்தின் படப்பிடிப்பின் போது கவுண்டமணியின் கால்ஷீட் கிடைக்கவில்லையாம்.

கவுண்டமணி அந்த சமயம் வேறு பல படங்களில் நடித்து கொண்டு இருந்தாராம். கவுண்டமணிக்கு அப்போது 3 மணி நேரம் மட்டும் கால்ஷீட் இருந்ததாம். உடனடியாக இந்த தகவல் ரஜினிகாந்திற்கு தெரியவர அன்று வேறுறொரு காட்சி பாபா படத்தில் எடுக்கப்பட்டு வந்ததாம். கவுண்டமணி கால்ஷீட் கிடைத்ததும் ரஜினிகாந்த் அந்த காட்சியை அப்டியே நிறுத்திவைத்துவிட்டு கவுண்டமணியை அழைத்து அவர் சம்மந்தப்பட்ட காட்சியை எடுக்க கூறினாராம்.

இப்போது தான் கவுண்டமணி கால்ஷீட் கிடைத்து இருக்கிறது இதற்கு மேல் விட்டால் கால்ஷீட் கிடைக்காது என அந்த 3 மணி நேரத்தில் பாபா படத்திற்கு தேவையான கவுண்டமணி காட்சிகளை எடுக்க ரஜினிகாந்த் கூறினாராம். அதுவும் ரஜினிகாந்த் பீக்கில் இருந்த சமயத்திலேயே கவுண்டமணியின் கால்ஷீட்காக காத்திருந்தாராம். இந்த தகவலை மருத்துவரும் சினிமா ஆய்வாளருமான கந்தராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

9 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

9 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

10 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

10 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

13 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

14 hours ago