கால்ஷீட் கிடைச்சா போதும்! கவுண்டமணிக்காக காத்திருந்த ரஜினிகாந்த்!

Published by
பால முருகன்

Rajinikanth : கவுண்டமணியின் கால்ஷீட் கிடைக்கவேண்டும் என்று ரஜினிகாந்த் பாபா பட சமயத்தில் காத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பொதுவாக சினிமாவில் ஹீரோவாக படங்களில் நடிக்கும் ஹீரோக்களின் கால்ஷீட் கிடைப்பது தான் பெரிய பிரச்சனையாக இருக்கும் . ஆனால், கவுண்டமணி காமெடியான கதாபாத்திரங்களில் நடித்து கொண்டு பீக்கில் இருந்த சமயத்தில் அவருடைய கால்ஷீட்காக நடிகர் ரஜினிகாந்தே காத்து இருந்தாராம். கவுண்டமணி நடித்து கொண்டு இருந்த காலத்தில் எல்லாம் அவருடைய காமெடி காட்சிகளை வைத்தே பல படங்கள் ஹிட்டும் ஆகி இருக்கிறது.

அந்த சமயம் எல்லாம் இதன் காரணமாகவே பல முன்னணி ஹீரோக்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தங்களுடைய படங்களில் கவுண்டமணி வேண்டும் என்று அடம் பிடித்து இருக்கிறார்கள். அப்படி தான் ரஜினிகாந்தும் கூட கவுண்டமணிக்காக ஒரு முறை காத்திருந்து அவருடைய கால்ஷீட் கிடைத்தால் போதும் என்று நினைத்தாராம். ஒரு முறை பாபா படத்தின் படப்பிடிப்பின் போது கவுண்டமணியின் கால்ஷீட் கிடைக்கவில்லையாம்.

கவுண்டமணி அந்த சமயம் வேறு பல படங்களில் நடித்து கொண்டு இருந்தாராம். கவுண்டமணிக்கு அப்போது 3 மணி நேரம் மட்டும் கால்ஷீட் இருந்ததாம். உடனடியாக இந்த தகவல் ரஜினிகாந்திற்கு தெரியவர அன்று வேறுறொரு காட்சி பாபா படத்தில் எடுக்கப்பட்டு வந்ததாம். கவுண்டமணி கால்ஷீட் கிடைத்ததும் ரஜினிகாந்த் அந்த காட்சியை அப்டியே நிறுத்திவைத்துவிட்டு கவுண்டமணியை அழைத்து அவர் சம்மந்தப்பட்ட காட்சியை எடுக்க கூறினாராம்.

இப்போது தான் கவுண்டமணி கால்ஷீட் கிடைத்து இருக்கிறது இதற்கு மேல் விட்டால் கால்ஷீட் கிடைக்காது என அந்த 3 மணி நேரத்தில் பாபா படத்திற்கு தேவையான கவுண்டமணி காட்சிகளை எடுக்க ரஜினிகாந்த் கூறினாராம். அதுவும் ரஜினிகாந்த் பீக்கில் இருந்த சமயத்திலேயே கவுண்டமணியின் கால்ஷீட்காக காத்திருந்தாராம். இந்த தகவலை மருத்துவரும் சினிமா ஆய்வாளருமான கந்தராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Recent Posts

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்… சர்வதேச நிகழ்வுகள் வரை…

சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது.  இதனால் இரு நாட்டு…

2 hours ago

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…

3 hours ago

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…

3 hours ago

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

4 hours ago

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

11 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

12 hours ago