ஐ.பி.எல்2020 கிரிக்கெட்டி போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இமாலய இலக்கை நோக்கி ஆடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி 7வது வரிசையில் பேட்டிங் செய்தது பெரும் விவாதத்திற்குள்ளாகி விவகாரமாகி உள்ளது.
இந்நிலையில் இது குறித்து இந்திய முன்னாள் வீரர் ஷேவாக் டோனியை கடுமையாக விமர்சித்துள்ளார்.அவர் கூறியதாவது:
கடைசி ஓவரில் டோனி விளாசிய 3 சிக்சர் சென்னை இலக்கை நெருங்கியது போன்ற எண்ணத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.ஆனால் உண்மை என்னவென்றால், டோனி நடுவில் இலக்கை விரட்ட கூட முயற்சிக்கவில்லை என்பது தான்.
unknown nodeஇந்த சிக்ஸர்க்கு பதிலாக அவர் (முதல் 13 பந்தில் 10 ரன் எடுத்த டோனி அடுத்த 4 பந்தில் 19 ரன் சேர்த்தார்) பந்துகளை அடிக்காமல் விரயம் செய்ததே எடுத்துக்காட்டு.தோனி முன்வரிசையில் இறங்கியிருக்க வேண்டும். மிடில் ஓவர்களில் ரன்ரேட் வெகுவாக குறைந்து விட்டது. ஒரு வேளை அப்படி ரன்ரேட் குறையாமல் கடைசி ஓவரில் 20-22 ரன்கள் தேவையாக இருந்து, அந்த சமயத்தில் தோனி 3 சிக்சர் அடிக்கிறார் என்றால் வாவ் அதி அற்புதமான நிறைவு என மக்கள் பாராட்டி இருப்பார்கள்.
ஆனால் பீல்டிங்கின் போது கூட டோனியின் சில முடிவுகள் விசித்திரமாகவே இருந்தது. சுழற்பந்து வீச்சாளர்கள் ஜடேஜா, பியுஷ் சாவ்லா ரன்களை வாரி வழங்கிய நிலையில் அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்தார். இந்த ஆட்டத்தை பொறுத்தவரை டோனியின் கேப்டன்ஷிப்பை மதிப்பிட சொன்னால் நான் 10க்கு 4 மதிப்பெண் தான் வழங்குவேன் என்று கூறியுள்ளார்.