ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ....!!!

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் உரிமை மீட்பு இயக்கம் சார்பில், தமிழ் கலாச்சாரத்துக்கு சம்பந்தமில்லாமல் அமைக்கப்படும் தனி கமிட்டிகளில் அனைத்து சமூகத்தினரும் இடம்பெறவேண்டுமென்றும் கோரப்பட்டுள்ளது.

சாதி ஆதிக்க விளையாட்டு :

unknown node

மேலும் இவர்கள் தொடர்ந்த வழக்கில், நாயக்கர் மன்னர்களின் காலத்தில் உருவான ஜல்லிக்கட்டு தமிழ் மக்களின் விளையாட்டு என்பதற்கு ஆதாரம் இல்லை என்றும், தற்போது நடக்கிற ஜல்லிக்கட்டு அரசின் ஆதிக்க துணையுடன் சாதி ஆதிக்க விளையாட்டாக மாறியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழகஅரசு அரசாணை வெளியிட்ட பிறகு , ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.