#Breaking:இல்லத்தரசிகளுக்கு ஷாக்..தங்கம் விலை உயர்வு!

Chennai: The price of jewellery gold has gone up by Rs 104 per razor to Rs 35,896 per razor.

சென்னை:22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்து,ஒரு சவரன் ரூ.35,896-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பொதுவாக பெண்களை பொறுத்தவரை தங்களது முதலீடுகளை தங்கத்தில் செலுத்துவது வழக்கம்.ஏனெனில்,அது புத்திசாலித்தனமான முதலீடாக பார்க்கப்படுகிறது.ஆனால்,தங்கம் விலையை பொறுத்தவரை,நாளுக்கு நாள் மாற்றங்கள் ஏற்பட்ட வண்ணமாக உள்ளது.அந்த வகையில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை அதிகரித்து வந்த நிலையில்,விலை சற்று குறைந்து நேற்று தங்கம் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில்,சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்து,ஒரு சவரன் ரூ.35,896-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைப்போல,சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.13 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,487-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சில்லறை வணிகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 10 காசு அதிகரித்து,ஒரு கிராம் ரூ.64.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.