கோவை நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் வெட்டி படுகொலை.
கோவை நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர்.
unknown nodeஇந்த கும்பல் இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்தில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மேலும், இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.