மது அருந்தும் போட்டி..!இணையத்தில் அழைப்பிதழ் வைத்த இளசுகள்..பரவிய பத்திரிக்கை..குவிந்த மதுபிரியர்கள்

இந்நிலையில் போட்டிக் குறித்து தகவலறிந்த லாலாபேட்டை போலீசார் இது தொடர்பாக புனவாசிப்பட்டியைச் சேர்ந்த 4க்கும் மேற்பட்ட இளைஞர்களை காவல்நிலையம் அழைத்து வந்து

மது அருந்தும் போட்டி வைத்து இணையத்தில் அழைப்பிதல் வைத்த இளைஞர்கள்

பரவிய பத்திரிக்கை அடுத்து குவிந்த மதுபிரியர்களை பொறி வைத்து பிடித்த காவல்துறை என வித்தியாசமான அழைப்பிதழ் சம்பவம் நடந்துள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள புவனாசிப்பட்டியில் மது அருந்தும் போட்டி நடப்பதாக சமூக வலைதளங்களில் அதி வேகமாக ஒரு விளம்பரம் ஒன்று பரவி வந்தது.அந்த விளம்பரத்தில்நுழைவுக்கட்டணமாக ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படும்  முதல் மருந்துபவர்களுக்கு முதல் பரிசாக 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இதனால் சுத்துப்பட்டு பகுதியில் உள்ள அனைத்து பிரியர்களும் குவிந்து உள்ளனர்

இந்நிலையில் போட்டிக் குறித்து தகவலறிந்த லாலாபேட்டை போலீசார் இது தொடர்பாக புனவாசிப்பட்டியைச் சேர்ந்த 4க்கும் மேற்பட்ட இளைஞர்களை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில்  விளையாட்டுக்காக அவர்கள் வாட்ஸ் ஆப்பில் மது அருந்தும் போட்டி குறித்த செய்தியை பரவ விட்டதாக தெரிவித்துள்ளதாக  தெரியவந்துள்ளது.